Wednesday, February 29, 2012

கீழக்கரையில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர மின்தடை


மின்சார வாரியம் அறிவிப்பு கீழக்கரை துணை மின் நிலையத்தில் நாளை (01.03.2012) வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் கீழக்கரை,ஏர்வாடி,முகம்மது சதக் கல்லூரி பகுதி, மாயாகுளம், உத்திரகோசமங்கை, களரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில், காலை 9 மணி முதல் 5 .30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய உதவி செயற் பொறியாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கீழக்கரையை சேர்ந்த சுஐபு கூறுகையில் , ஏற்கெனவே அறிவிக்காமல் பல மணி நேரம் மின்வெட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.எனவே இதுபோன்ற அறிவிப்புகளை மின் இலாகா நிறுத்திவிடலாம் என்றார்
தகவல் : ஸாலிஹ் ஹுசைன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.