Tuesday, February 28, 2012

கீழக்கரை கல்லூரியில் தகவல் தொழில் நுட்ப துறை கருத்தரங்கம் !


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கணிணித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக அசோசியேசன் தொடக்க விழா மற்றும் சோர்பிங் 12 என்ற பெயரில் துறைகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்ற‌து .நிகழ்ச்சிகளுக்கு முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமை வகித்தார்.பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்இதில் மதுரை விஜய லட்சுமி ஹைடெக் நிறுவனத்தின் இயக்குநர் விஜய லட்சுமி ஸ்டீபன் கலந்து கொண்டு பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஜகாபர் பரிசுகளை வழங்கினார். தகவல் தொழில் நுட்பத்தலைவர் விஜய் ராஜ் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.