Friday, February 17, 2012

கைராத்துல் ஜலாலியா பள்ளியின் 31ம் ஆண்டு விழா !



கீழக்கரை கிழக்குத்தெரு முஸ்லீம் ஜமாத் நிர்வாகத்தில் இயங்கும் கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளியில் 31ம் ஆண்டு விழா நடைபெற்றது.


விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சாதிக் தலைமை தாங்கினார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் முகம்மது மீரான் வரவேற்றார். டாக்டர் ஜவாஹிர் ஹுசைன் ,நிஜாமுதீம்,அஸ்ஹர்,சேகு அபுபக்கர் சித்தீக், கொடி ஏற்றினர். கல்விக்குழு உறுப்பினர் ஹீசைன் அப்துல் காதர் ஒலிம்பிக் தீபம் ஏற்றினார். முன்னாள் தாளாளர் மஹ்மூது கரீம் விளையாட்டு போட்டியை துவங்கி வைத்தார்.


இதில் மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன .கிழக்கு தெரு ஜமாத் தலைவர் முகைதீன் அப்துல் காதர் ,கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளி தாளாளர் செய்யது இப்ராகிம் ,ஆசிரியர் சையது அப்தாகிர்,ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா,மற்றும் தாளாள‌ர் சாதிக் ஆகியோர் வெற்றி பெற்ற‌ மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ரிசுக‌ளையும்,சான்றித‌ழ்க‌ளையும் வ‌ழ‌ங்கினார்.உத‌வி த‌லைமை ஆசிரிய‌ர் சாதிக் அலி ந‌ன்றி கூறினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.