Tuesday, November 12, 2013

பள்ளிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டி !கீழக்கரை இஸ்லாமியா பள்ளி 3 இடத்தை கைப்பற்றியது!


ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டி நடைபெற்றது.
இப்போட்டிகளில் மாவட்டத்திலிருந்து ஏராளமான பள்ளிகளின் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

இப்போட்டிகளின் இறுதியில் முதல் இடத்தை ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் பள்ளியும்,இரண்டாம் இடத்தை நேஷனல் அகாடமி பள்ளியும் மூன்றாம் இடத்தை கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளியும் கைப்பற்றியது.

இஸ்லாமியா பள்ளிகள் சார்பில்  மாணவிகள் ஹஸ்மத் தவ்ஹா(9ம் வகுப்பு),ஹைருன் ஹபீலா(9ம் வகுப்பு),சுமையா அல் சஹீதா(8ம்வகுப்பு) ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றனர்.

இஸ்லாமியா பள்ளிகளில் இருந்து முதல் முறையாக மாவட்ட அளவில் பங்கேற்றது குறிப்பிடதக்கது.


1 comment:

  1. கீழை அலிபாட்சா 8/9 ஓ.ஜே.எம்.தெருNovember 12, 2013 at 6:50 PM

    ராமநாதபுரத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி வினா போட்டியில் வாகை சூடிய அன்புக்குரிய மாணவச் செல்வங்களுக்கும், அவர்களை உருவாக்கிய ஆசிரிய பெருந்தகைகளுக்கும், சீர் மிக்க பள்ளி நிர்வாகத்திற்கும் மனம் கனிந்த நல் வாழ்த்துகள். இது போல மேன்மேலும் வாகை சூடவல்ல நாயனிடம் இரு கையேந்தி இறைஞ்சுகின்றேன்

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.