Thursday, June 20, 2013

கீழக்கரை கடல் பாலத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையால் பரபரப்பு!

 கீழக்கரை கடல் பாலத்தில் ஒத்திகையின் போது பிடிபட்டவர்களை போலீசார் விசாரிக்கின்றனர்

கடலோர மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழகத்தில் ஆண்டு தோறும் நடத்தப்படும் அம்லா ஆப்ரேஷன்  தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால், கடற்கரைப் பகுதிகள் முழுமையான பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களின் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளின் கடல் வழி ஊடுருவலை முறியடிக்கும் நோக்கில், தமிழகத்தில் அம்லா ஆப்ரேஷன் என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஒத்திகை தொடங்கியது. கடலோர பாதுகாப்புப் படையும், காவல்துறையும் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயங்கரவாதிகளைப் போல் கடல் வழியாக ஊடுருவ முயலும் சீருடை அணியாத பாதுகாப்பு அதிகாரிகளை கண்டுபிடிப்பதும், கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக உறுதிப்படுத்துவதுமே இந்த ஒத்திகையின் நோக்கம்.

இந்நிலையில் ஏர்வாடி, கீழக்கரை கடல் பகுதியில்  நடந்த ஒத்திகையின்   போது   தீவிரவாதிகள் போன்று பாப்பாத்தி என்ற பெயர் கொண்ட படகில் வந்த மூன்று பேர்  கடல் பகுதியில்  ஊடுருவினர்.இவர்களை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்றனர் .


பிடிபட்ட  மூவரில் தலைமை காவலர் ராமசந்திரன்,கோஸ்ட் கார்ட் செல்லப்பா,இந்தியன் நேவியை சேர்ந்த கவுதம் யாதவ்  கடலோர பாதுகாப்பு ஆப்பரேசனில் பங்கேற்றவர்கள் என தெரிய வந்தது.

கீழக்கரை ஜெட்டி பாலம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆப்ரேஷன் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது.

ஒத்திகை என்று அறியப்படாததால் தீவிரவாதிகள் பிடிபட்டதாக  செய்திகள் பரவியது


 

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.