Tuesday, June 11, 2013

துள்ளி செல்லும் பள்ளி குழந்தைகளை அள்ளி அடைத்து செல்லும் வாகனங்கள்! ஆபத்து ஏற்படும் முன் முறைப்படுத்த தமுமுக கோரிக்கை!



இது  குறித்து தமுமுக நகர் தலைவர் சிராஜுதீன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது
தற்போது பள்ளிகள் தொடங்கி விட்டதால் பள்ளி மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் செயல்பட  தொடங்கி விட்டது.

கீழ‌க்க‌ரையில் அதிக‌ அளவில் ஆம்னி வாக‌ன‌ங்கள் மற்றும் ஆட்டோக்கள் ப‌ள்ளி குழ‌ந்தைகளை மாத வாடகை அடிப்படையில் அழைத்து செல்கின்ற‌ன‌ர்.இவ‌ற்றில் ப‌ல வாடகைக்கு இயக்க முறையான‌ அனுமதி பெறவில்லை மேலும் சில‌ருக்கு ஓட்டுந‌ர் லைசென்ஸ் இல்லை.சிலர் கூடுதல் வாடகைக்காக அதிக அளவில் ப‌ள்ளி குழ‌ந்தைக‌ளை புளி மூட்டை போல் அடைத்து ஏற்றி செல்கின்ற‌னர்.புத்தக பைகளை அதிக அளவில் மேற்கூரையில் ஏற்றுவதால் வளைவுகளில் கவிழும் ஆபத்து உள்ளது .

மேலும் தெருக்க‌ளிலும்,வ‌ளைவுக‌ளிலும் அசுர‌ வேக‌த்தில் செல‌வதால் அடிக்க‌டி சிறு சிறு விப‌த்துக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌.அரசு அதிகாரிகள் பள்ளி மாணவ,மாணவியர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை முறைப்படுத்த வேண்டும்.   ஓட்டுநர்களும் பொறுப்புணர்ந்து பாதுகாப்பான முறையில் அழைத்து செல்ல வேண்டும்.பெற்றோர்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்
 இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

 

4 comments:

  1. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 12, 2013 at 7:45 PM

    பல சந்தர்பங்களில் இதைபற்றி பேசி விட்டோம்.விவாதித்து விட்டோம். ஆனால் நடவடிக்கையோ / பலனோ பூஜ்ஜியமாக உள்ளது. ஒரு சமயம் பாரிய விபரிதம் நடக்கட்டும் என்ற காத்திருப்போ?

    இந்த நிலையை சீர் செய்ய வேண்டுமானால் கீழக்கரையில் போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு செய்தே ஆக வேண்டும்.அத்துடன் வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ( RIGIONAL TRANSPORT OFFICER) தொடர் கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இதனால் தனிப்பட்ட விரோதங்களும், சாதி, சமய சாயம் பூசும் வேலைகளும் தடுக்கபபடும்.


    கீழ்கண்ட தகவல் கீழை முரசில் 01/02/12 -ல் வெளியானதின் மறுபதிப்பு:

    கீழக்கரை சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சார மதிப்புகள் வீழ்ச்சியடைந்து வருவதுடன் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு வருவதையும்,கடந்த காலத்தில் நாம் இழந்த சமூக விழுமியங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் சில புரட்சிகர இளைஞர்கள் அனைத்து ஜமாஅத்துக்களுடன் கலந்து பேசி வருவதையும் கீழைமுரசு வாசகர்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

    இந்த முயற்சிகளை தொடர்ந்து, இன்று காலை கீழக்கரை பைத்துல்மாலில் குத்பா கமிட்டியின் கூட்டம் , கமிட்டியின் தலைவர் செ.மு. ஹமீது அப்து காதர் தலைமயில் நடை பெற்றது, கீழக்கரையின் 8 ஜமாஅத்தை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர், இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பினர்களாக கீழை புகாரி, கீழை முஜிப், ஹுசைன், கன்மனி அலி, அப்துல் ஹமீது, உட்ட்பட சிலரும் அழைக்கப்பட்டிருந்தனர். வழக்கமாக சாதாரன விஷயங்களை மட்டுமே அலசும் இந்த கூட்டத்தில், இன்று அனல் கக்கும் விவாதங்கள் தெறித்தது. சகோ. புஹாரி மற்றும் சகோ. அப்துல் ஹமீது ஆகியோர்கள் நெருப்பு பிழம்பாக மாறி பேசினர்.

    குறிப்பாக கீழக்கரையில் அரங்கேற்றப்படும் இஸ்லாத்திற்கு எதிரான, அறுவறுப்பான கலாச்சார சீரழிவுகளின் போக்கு, ஜமாஅத்துக்களின் கையறுபபட்ட நிலை, கலாச்சார சீரழிவுகளை அங்கீகரிக்கும் நம் மக்களின் மன மாற்றம், எல்லைமீறி போகும் அனாச்சாரங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மானவ சமுதாயத்தை சீரழிக்க புறப்பட்டிருக்கும் சமூக பொறுக்கிகள், அவர்களின் தொழில், சமுதாயத்தில் பதமாய் கலந்து கீழக்கரையின் கலாச்சார மதிப்புக்களை உறிஞ்சி சக்கையாய் துப்பும் நஞ்சுகள், பணத்தால் அவலங்களை மறைக்கும் பரிதாபம், ஆகிய சீர்கேடுகளை பற்றி பேசினார்கள், மேலும், சமீபத்தில் நடைபெற்ற சம்பவஙகளை நம்மை சுற்றி கண்டும் கானாமல் விட்டுவிட்டால் எதிர்கால சந்த்தியினருக்கு நாம இந்த கேடுகெட்ட செயல்களுக்கு அங்கீகாரம் வழங்கிவிடும் சரித்திரப் பிழையை செய்துவிட வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். நிகழ்வுகளின் சூழ் நிலை உணமையை அறிந்து கொண்டு இதுவரை கீழக்கரை வரலாறு கண்டிராத கீழ்காணும் அதிரடி முடிவு குத்பா கமிட்டி எடுத்து இருக்கிறது.

    இனி வரும்காலங்களில் சமூக மதிப்பீடுகளை வலுவிழக்க செய்யும் சம்பவங்கள் ஜமாஅத்துக்களின் மூலமே , தீர்க்கப்படும் எந்த கட்சியோ, இயக்கமோ, தனிநபர்கள் அமைப்போ இந்த் விஷயத்தில் தலையிட அனுமதிக்க முடியாது, இது போன்ற விஷயத்தில் ஜமாத்துக்களின் முடிவே இறுதியானது.

    இந்த விஷயங்களை கண்காணிக்க மற்றும் ஆராய “அனைத்து ஜாமாத்துக்கள் கூட்டமைப்பு ’ வழிநடத்துதலின் கீழ் கண்கானிப்பு குழு அமைக்கப்படும், ஓவ்வொரு ஜமாத்துக்களில் இருந்து 3 பேர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இதன் தலைவராக “குத்பா கமிட்டியின்” தலைவரே செயல்படுவார்.

    மானவர்களை பள்ளி, மற்றும் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும், வேன்கள்,ஆட்டோக்கள் ஆகியவை ஜமாஅத்துக்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும், மேலும் ஜமாஅத் குழுக்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் இந்த வாகனங்கள் கொண்டு வரப்படும்.

    மேலே சொல்லப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இந்த குழு இனி மாதம் ஒரு முறை கூடி விவாதிக்கும் என கூறப்பட்டிருக்கிறது, ஜமாஅத்துக்களின் இந்த ஒருங்கினைப்புத் திட்டம், அறியாமை உள்ளங்களில் விஷ விதை நட்டு சொகுசாய் காய்பறித்து குசு விடும் பண்டார நாய்களின் வேட்டிக்குள் வேட்டு வச்ச மாதிரி ஆகிடுச்சுன்னு ஊர்ல பேசிக்கிறாங்க.. உண்மைதான் நாங்களும் “கொலை வெறி” லதான் இருக்கிறோம்.

    நன்றி: கீழை முரசு அனவரும் காண வேண்டிய வளைத் தளம்: www.keezhaimurasu.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் சம்பத்தப்பட்ட பொறுப்பாளருக்கு,

      வட்டார போக்குவரத்து அதிகாரி ( Regional Transport Officer) களுடன் தொடர்பு கொண்டு நம்ம ஊரில் உள்ள சில தெருக்களில் ஒரு ஆட்டோவே போய் / வர சிரமப்படும் பொடிப் பொடி சந்துகளை தெரிவு செய்து ஒரு வழி (ONE WAY) சாலையாக மாற்றிக்கொடுக்கவும் மேலும்,

      ஆட்டோ டிரைவர்கள் தன் இஷ்டத்துக்கு Time to Time சார்ஜ்-ஐக் கூடுதலாக்காவண்ணம் சார்ஜ்-ஐ FIX பண்ணி ஒவ்வொரு ஆட்டோ ஸ்டாண்டிலும் ஆட்டோ டிரைவர் சீட்டுக்குப் பின்புறமும் Charge List-ஐ பயணிகள் பார்வைக்கு ஒட்டிவைக்கும்படியும் அறிவுறுத்தவும் மேலும்,

      அனைத்து ஆட்டோக்களின் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் இவர்களது செல் நம்பர்கள் எந்த ஸ்டாண்டு (ஆட்டோ நிறுத்தும் ஏரியா) இவைகளை கண்காணிப்புக் குழுவிடம் கொடுத்து அவர்களை MONITOR செய்து வருமாறும் பணிக்கவும்.

      ஊர் நலனில் அக்கறை கொண்டோர் சிறிது கவனம் செலுத்தி ஆவன செய்தால் அநாவசியமான பழிச்சொல்லில் இருந்து நம்ம ஊர் / இன மக்களைக் காக்கலாம் சில கூத்தாடிகளின் கொட்டத்தையும் அடக்கலாம்.

      Delete
    2. 1/2/12 அன்று குத்துப கமிட்டியில் எடுக்கபட்ட முடிவை எந்த ஜமாத்தும் செயல்படடுத்த இதுவரை முன்வரவில்லை ஏன்என்ற காரனம் இதுவரை புரியவில்லை ஜமாத்தை நிர்வாகம் செய்பவர்கள் இதில் சரியான முடிவு எடுக்க வேன்டும்

      Delete
  2. மங்காத்தாவின் தங்கச்சி மகன்June 12, 2013 at 7:58 PM

    மாணவச் செள்வங்களின் பிரச்சனையாக இருப்பதால் நகரில் உள்ள கல்விக் குழுமங்கள், அரசிடம் தங்களுக்கு உள்ள செல்வாக்கை பயன் படுத்தி நல்ல தான, உடனடியான தீர்வு காண ஒருங்கிணைந்து முயல வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.