Tuesday, June 25, 2013

கீழக்கரையில் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்து வருகிறது!வீடுகளில் மழை நீர் சேகரிப்பை முறைபடுத்த கமிஷனர் வேண்டுகோள்


சில மாதங்களுக்கு முன் கீழக்கரை வந்திருந்த அரசு அதிகாரிகள்
 நவீன‌ கருவிகள் மூலம கீழக்கரையில் காற்றின் ஈரப்பதம் ,மழையின் அளவு,ஆக்சிஜென் அளவு ,போன்ற பல் வேறு கணக்கெடுப்புகள் செய்து ஆய்வு செய்தார்கள்.

 ஆய்வுக்கு பின் அவர்கள் கூறியதாவது ,கீழக்கரையில் பசுமை அளவு 38 % இருக்க வேண்டும் ஆனால் இருப்பது 21 % மட்டு
ம் இது மிகவும் குறைவாகும் பசுமை அளவு மிக குறைந்த பட்சம் 33 % இங்கு அமைந்திருக்க வேண்டும் எனவே கீழக்கரை பகுதிகளில் பசுமை அளவை அதிகரிக்க வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்க வேண்டும் அல்லது வீட்டின் மாடியில் ஆக்சிஜென் தரக்கூடிய சிறிய மரம் அல்லது செடியை வளர்க்க வேண்டும்.

இது போன்ற முறைகளை பின்பற்றவில்லை என்றால் பிற்காலத்தில் மழையளவு குறையும்,நிலத்தடி நீர் குறையும் ,இயற்கை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகலாம்.இயற்கை சீற்றம் நிகழவும் வாய்ப்பு உள்ளது   என தெரிவித்து சென்றார்கள்

இந்நிலையில், கீழக்கரை நகராட்சி கமிஷனர்முகம்மது முகைதீன் கூறியதாவது:

ஆயிரக்கணக்கான வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாமல், நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு ஆலோசனை கூறி, மறு சீரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது வரை அமைக்காதவர்களின் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க வலியுறுத்தி வருகிறோம், என்றார்.

இது குறித்து சமூக நல அர்வலர் செய்யது இப்ராஹிம் கூறுகையில்,
கீழக்கரை  உள்ள சமூக நல அமைப்புகள்,நகராட்சி நிர்வாகம்  பொதுமக்கள் ஆகியோர் இஅணைந்து இப்பிரச்ச்னை தீர்க்க செயல்பட வேண்டும்.அதிக அளவில் மரங்கள் நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.