Wednesday, June 19, 2013

கீழக்கரையில் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ பிரச்சாரம்!


சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார் பில் யுஏபிஏ (சட்டவிரோத செயல் தடுப்பு சட்டம்) சட் டத்தை ரத்து செய்ய வேண் டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கீழக்கரையில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.

கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக் தலை மை வகித்தார். தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், தொழிற்சங்க அமைப்பாளர் கார்மேகம், மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட செயலாளர் அப் துல் ஜமீல் மற்றும் நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்த னர்.

 முன்னதாக நகர் இணை செயலாளர் அபூபக்கர் சித் திக் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அப் துல் ஜமீல் பேசுகையில், ‘இந்த சட்டம் கொடூருமானது. இதனால் சிறுபான் மை சமூகத்தினரும், தாழ்த்தப்பட்டவர்களும் பாதிக்கப்படுவார்கள். தடா, பொ டா சட்டங்களை விட மோ சமான யுஏபிஏ சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்’ என்றார். தெரு முனை பிரசாரத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

1 comment:

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.