Sunday, June 2, 2013

கீழக்கரையில் வீடு புகுந்து நகை திருட்டு!மர்ம ஆசாமிகளை போலீஸ் தேடுகிறது!


கீழக்கரை தெற்குத் தெரு பகுதியைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் (35). இவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிந்தார்.
  இந் நிலையில் நள்ளிரவு வீட்டிலிருந்த பீரோவை திறக்கும் சப்தம் கேட்டது. முஜிபுர் ரஹ்மான் கண் விழித்துப் பார்த்தபோது, மர்ம நபர்கள் வீட்டிற்குள் இருந்தனர்.
  முஜிபுர் ரஹ்மான் மற்றும் குடும்பத்தினர் கூச்சல் போட்டதால் அவர்கள் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பீரோவில் பார்த்தபோது 3 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது.
  இது குறித்து கீழக்கரை காவல் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன்  வழக்குபதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.