Sunday, June 30, 2013

கீழக்கரை பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்




 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதியியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தார். வேதியியல் துறை தலைவர் தாவீதுராஜா வரவேற்புரையாற்றினார். இதில் ஜெர்மனி டுஸ்பர்க்-எஸ்சன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் கணேசமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வேதியியல் துறையின் பயன்பாடுகளையும் அதன் வளர்ச்சியையும் பற்றி எடுத்துரைத்ததுடன் தண்ணீரை எரிபொருளாக மாற்றும் ஆய்வுக் கட்டுரையையும் மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

 இறுதியில் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் சேக்பரீது நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை பேராசிரியர்கள் மற்றும் நஜிமுதீன் ஆகியோர் செய்திருந்தனர்.  
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.