Sunday, June 30, 2013

கீழக்கரை அருகே ஏர்வாடியில் தலைமறைவாக இருந்த கேரளா இளைஞர் கைது!




கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச்சேர்ந்த யூனுஸ் மகன் ரியாஸ்(32). இவர் மீது திருச்சூர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் அவரை போலீசார் தேடி வந்தனர். ஏர்வாடியில் அவர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கேரள போலீசார் ஏர்வாடியில் முகாமிட்டு அவரை தேடினர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்த போலீசார் கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.