Tuesday, June 25, 2013

மானாமதுரை - சென்னை புதிய "சிலம்பு" ரயில்! ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை


photo >Dinakaran news

மானாமதுரை&சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வர
ம் வரை நீட்டிக்க வேண்டும் என ராமநாதபுரம் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மானாமதுரை& சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த 22ம் தேதி மானாமதுரையில் இருந்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் துவக்கி வைத்தார். இவ்விழாவில் ராமநாதபுரம் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர், மத்திய நிதியமைச்சரை பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் சென்னை செல்ல தற்போது ராமேஸ்வரத்திலிருந்து தினசரி இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்கள் போதுமானதாக இல்லை.ராமநாதபுரம் ,ராமேஸ்வரம்,ராமநாதபுரம்,கீழக்கரை,பரமக்குடி பகுதி மக்கள்சென்னை செல்ல போதிய ரயில்கள் இல்லாமல் பஸ்களில் செல்கின்றனர்.

பயணிகளின் வசதிக்காக மானாமதுரை& சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து ஆவணம் செய்வதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களை நிறுத்தி சர்வீஸ் செய்யும் வசதிகள் கிடையாது. பிட்லைன் இருந்தால்தான் கழிவறைகளை சுத்தம் செய்வது, ரயில் பெட்டிகளில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் சரி செய்வது உட்பட பணிகளை செய்ய முடியும். ரயில் பைலட்டுகள், கார்டுகள் தங்குவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை.

மானாமதுரையுடன் நிறுத்தப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் ராமேஸ்வரம் அல்லது காரைக்குடிக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.

இதனால் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்தால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், ராமநாதபுரம் மாவட்ட மக்கள், யாத்ரீகர்களுக்கு வசதியாக இருக்கும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.