Sunday, June 23, 2013

கீழக்கரை கல்லூரியில் 630 மாணவ,மாணயவிருக்கு விலையில்லா லேப்டாப்!


 பட விளக்கம் :அமைச்சர் சுந்தர்ராஜ் மாணவர் விலையில்லா மடிகணிணியை வழங்குகிறார்

கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக அரசின் மடிகணிணி வழங்கும் விழா முஹம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாஹிப் தலைமையில் நடைபெற்றது.

கைத்தறி மற்றும் நெசவுத்துறை அமைச்சர் சுந்தராஜ் ,பொறியல் கல்லூரி முதல்வர் ஜகாபர்,சென்னை சதக் கல்லூரி இயக்குநர் ஹாமிது இப்ராஹிம்,தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரியத்த்லைவரும் அதிமுகவின் ராமனாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சுந்தரபாண்டியன்,தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில் 630 மாணவ,மாணவியர்களுக்கு மடிகணிணி வழங்கப்பட்டது
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.