Wednesday, June 19, 2013

கீழக்கரை சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் தொடரும் போக்குவரத்து நெரிசல்!

மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த தெருக்களின் இருபுறமும் சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைப்பதால், கீழக்கரை பகுதியில் விபத்து அபாயம், வீண் நெரிசல் ஏற்படுகிறது.
 
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகரில் வள்ளல் சீதக்காதி சாலை, தபால் நிலையச்சாலை உள்ளிட்டவை மக்கள், வாகன போக்குவரத்து நிறைந்த பிரதானச் சாலைகள். எப்போதும் பரபரப்பாக காணப்படும் வள்ளல் சீதக்காதி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிகம் செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருக்கும்.
 
நெரிசல் மிகுந்த இந்த நேரங்களில், சாலைகளின் இருபுறமும் கனரக வாகனங்களை நிறுத்தி வைத்து சரக்குகளை இறக்குகின்றனர். தபால்நிலைய சாலையில் இரு வங்கிகள் உள்ளன. அந்தச் சாலையில் காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை வங்கிகளுக்கு வரும் மக்களே நடமாடமுடியாத அளவிற்கு இரு புறமும் ஆட்டோ மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாகனங்களை அகற்ற, போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
 
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் கீழக்கரை நகர் தலைவர் சிராஜூதீன் கூறுகையில், “கீழக்கரையில் பள்ளி மற்றும் கல்லு�ரிகள் அதிகளவில் உள்ளன. அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள் சென்று திரும்ப முடியாத அளவுக்கு சாலைகளின் இருபுறமும் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைக்கிறார்கள். இதனால் பள்ளி கல்லு�ரிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. வீண் நெரிசல், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. பள்ளி திறக்கும் மற்றும் பள்ளி விடும் நேரங்களில் இப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.