Tuesday, June 25, 2013

கீழக்கரையில் ஏராளமான அணிகள் பங்கேற்ற வாலிபால்!


கீழக்கரை வடக்குத் தெரு மணல் மேட்டில் அல் ஜதீத் விளையாட்டு கிளப் (JVC) சார்பில் இரண்டு நாட்களாக நடைபெற்ற (சனி மற்றும் ஞாயிறு) 1 4 ஆம் ஆண்டு  மின்னொளி கைப்பந்து போட்டி நடை பெற்றது. 
40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற இந்த வாலிபால் போட்டியில்,

முதல் பரிசை AVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், இரண்டாம் பரிசினை JVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும், மூன்றாம் பரிசினை CVC ஸ்போர்ட்ஸ் கிளப்பும் தட்டிச் சென்றது.

விளையாட்டு போட்டியினை அல் ஜதீத் ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ஆபித் அலி  ஏற்பாடு செய்து இருந்தார்.

இந்த நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் அஹமது மிர்ஷா,கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர். பசீர் அஹமது, பொருளாளர். ஹாஜா அனீஸ், மற்றும் ஜமாத் பிரமுகர்கள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டினர்.ஏராளமான பொதுமக்கள் விளையாட்டை காண குவிந்தனர்.

தகவல் : கீழை இளையவன்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.