Friday, August 9, 2013

கீழக்கரை (மணல்மேடு) கண்காட்சி திடல்!பாதுகாப்பு பணிக்காக பெண் போலீசார் உள்ளிட்ட கூடுதல் போலீசார் வருகை!

 OLD (File) photo
OLD (File) photo

கீழக்கரையில் பெருநா ளை முன்னிட்டு வடக்கு தெரு மணல் மேடு  என்றழைக்கப்படும் திடலில் ஆண்டுதோறும் கண்காட்சி நடைபெறும்.இங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ராட்டினம்,உள்ளிட்ட பொழுது போக்கு சாதனங்கள் நிறுவப்படும்.மாலை நேரத்திலிருந்து இரவு வரை இங்கு ஏராளமானோர் வந்து செல்வர்.

இந்நிலையில் இந்தவருடமும் வழக்கம் போல் மணல்மேடு பகுதியில் கண்காட்சி நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு வரும் வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்படும்.மேலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக பெண் போலீசார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் வெளியூரிலிர்ந்து வர உள்ளதாக காவதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அனுமதியின்றி புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை என போலீசார் தெரிவித்தனர்

 

3 comments:

  1. மணல்மேடு திடலை தேவையில்லை என்ற கருத்து எழும் நிலையில் அதே சமயம் ரமலான் தினத்தன்று மாலையில் சிறுவர்,சிறுமியர்களகளை அழைத்து சென்று வர மாற்று ஏற்பாடுகள் வேண்டும். இல்லையென்றால் வேறு யாராவது தனியார் இது போன்ற திடலை ராம்நாதபுரம் செல்லும் வழியிலேயே தொடங்க நேரிடும் ஏனென்றால் வியாபார நோக்கத்திற்க்காக சென்ற வருடமே இதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டதக செய்திகள் உண்டு.அங்கு நமது மக்கள் செல்ல நேரிடலாம்.எனவே நம்மை நாமே குறை கூறாமல் மாற்று வழிகளை சிந்தித்து ஒற்றுமையுடன் இப்பிரச்சனை திர்க்க உரியவர்களுக்கு ஆலோசனை கூறலாம்

    ReplyDelete
  2. Mm Perunal Thidal entha vitha prechanaum illamal seeraka nadaka vendum..

    ReplyDelete
  3. Perunal Thidal entha vitha prechanaum illamal nadaka vendum.. Athu angu varupavargal kaikalilthan irukirathu anaivarum sagotharathuvathutan nadanthu kondal nanraga irukum..

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.