Saturday, August 17, 2013

குடிநீர் தட்டுப்பாடு! கீழக்கரை அருகே ஊராட்சி தலைவரை முற்றுகையிட்ட பொது மக்கள்!


ஏர்வாடியில் தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வராததை கண்டித்து வெட்டமனை பகுதியில் பெண்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி தலைவரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர்வாடியில் வெட்டமனை பகுதியில் சுமார் சுமார் 600க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் தொடர்ந்து 5 மாதங்களுக்கும் மேலாக காவிரி கூட்டுக்குடிநீர் வரவில்லை. பல வருடங்களாக இந்த கிராமத்திற்கு சாலைவசதி ஏற்படுத்தவில்லை. இந்த பகுதியில் மூன்று தெரு விளக்குகள் மட்டுமே எரிவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதுகுறித்து கலெக்டர் மற்றும் கடலாடி ஒன்றிய தலைவரிடமும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து மனுச் செய்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று அந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக வந்த ஊராட்சி தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை பெண்கள் காலிங்குடங்களுடன் முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து கவுன்சிலர் சவுந்திரபாண்டியன் கூறுகையில், ‘வெட்டமனை பகுதியில் முழுமையாக தெருவிளக்கு வசதி செய்து தரவேண்டும். வெட்டமனைக்கு தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
குழாய்களில் குடிநீர் வராததால் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று சின்ன ஏர்வாடி பகுதியில் தண்ணீர் எடுத்து பெண்கள் சுமந்து வரும் நிலை உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
ஏர்வாடி ஊராட்சித் தலைவர் முகமது அலி ஜின்னா மற்றும் போலீசார் சமாதானம் பேசியதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

4 comments:

  1. TAMILNADU ARASU KADANTHA 3 VARUDAMAKA PUTHI RATION CARD VAZHANKUVATHAI NIRUTHI VAITHULLATHU, ETHU ENNA KARANATHINAL NIRUTHI VAIKKA PATTULLATHU ENDRU THERIYA VILLAAI, MAKKAL RAMANATHAPURAM THALUKA ALUVALAKATHIL THINATHORUM PUTHIYA RATION CARD KEDDU POTHU MAKKAL ALAITHU THERIVATHODU VINVIRAYAMAKA SEILAUM SEITHU VARUKIRARKAL, THAMILAKAM ARASUM , ARASU ULIYARKALUM ETHANAI ORU PORUDAKAUM EDUTHU KOLVATHILLAI, POTHU MAKKAL MADRUM POTHU MAKKAL NALAN KARUTHU KADCHIKAL AARPADATHIL KUTHITHU MAKALIN URIMAIYAI VEDRU EDUKKA VENDUM,

    ReplyDelete
  2. TAMILNADU ARASU KADANTHA 3 VARUDAMAKA PUTHI RATION CARD VAZHANKUVATHAI NIRUTHI VAITHULLATHU, ETHU ENNA KARANATHINAL NIRUTHI VAIKKA PATTULLATHU ENDRU THERIYA VILLAAI, MAKKAL RAMANATHAPURAM THALUKA ALUVALAKATHIL THINATHORUM PUTHIYA RATION CARD KEDDU POTHU MAKKAL ALAITHU THERIVATHODU VINVIRAYAMAKA SEILAUM SEITHU VARUKIRARKAL, THAMILAKAM ARASUM , ARASU ULIYARKALUM ETHANAI ORU PORUDAKAUM EDUTHU KOLVATHILLAI, POTHU MAKKAL MADRUM POTHU MAKKAL NALAN KARUTHU KADCHIKAL AARPADATHIL KUTHITHU MAKALIN URIMAIYAI VEDRU EDUKKA VENDUM,

    ReplyDelete
  3. TAMILNADU ARASU RAMANATHA PURATHIRUKKU PALA NALATHIDAMKALAI PALA KODIL RUPAYEE SEIVATHAKA SOLLIKONDU , ADIPADAI THEVEYANA RATION CARD VAZHAKKUVATHAI PALA VARUDANKALA NIRUTHI VAITHU IRUPPATHU VEDKAKEDANATHU

    ReplyDelete
  4. TAMILNADU ARASU PUTHIYA RATION CARD VISAYATHIL POTHU MAKKALAI PALA VARUDAMAKA EMADRI VARUKIRATHU, ETHAI VANMAYAKA KANDIKAPADA VEDIYA VISAYAM

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.