Tuesday, July 2, 2013

கீழக்கரை கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த கோரிக்கை!

photo:Abu

கீழக்கரை கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியை சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்த கோரிக்கை!

இந்தியாவில் உள்ள 13 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலாதலமாக்கும் திட்டத்தைமத்திய அரசு 2011ம் ஆண்டு துவக்கியது.தமிழகத்தின் மாமல்லபுரம்,ராமேஸ்வரம்,கன்னியாக்குமரி,முட்டம்   சென்னை மெரினா ஆகிய பகுதிகளிலுள்ள கலங்கரை விளக்கங்கள் ரூ 300 கோடி மதீப்பீட்டிலானஆகியவை இத்திட்டத்தில் இடம் பெற்று இத்திட்டத்தை மத்திய கபபல் துறை அமைச்சர் வாசன் துவக்கி வைத்தார்.மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைத்தல்,சென்னை மெரினாவில் கலங்கரை விளக்க அருங்காட்சியகம் அமைத்தல் என பணிகள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருதது. சுற்றுலாதொழிலை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கமும் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்போது எழுந்தது.

அச்சமயம்  கீழக்கரை வருகை தந்திருந்த மத்திய அமைச்சர் வாசனிடம் கீழக்கரை கலங்கரை விளக்க பகுதியை சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில்  மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர். பரிசீலக்கப்படும் என்றார்

இது குறித்து கீழக்கரையை சேர்ந்த செய்யது இப்ராஹிம் கூறியதாவது,


சென்னை கலங்கரை விளக்க மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் ,கீழக்கரை கலங்கரை விளக்கம் 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது.இது 35 மீட்டர் உயரம் கொண்டது பரந்து விரிந்த நீலக்கடலோரத்தில் அமைந்துள்ள கீழக்கரையையோட்டி ,அப்பாத்தீவு உள்பட ஏராளமான குட்டி தீவுகள் உள்ளன.கடற்கரையை ஓரம் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இப்பகுதிக்கு சுற்றுலா வநது செல்கினறனர்.

கீழக்கரையை சுற்றுலாத்தலமாக அறிவித்து அருகே அமைந்துள்ள குட்டி தீவுகளுக்கு சென்று வர கண்ணாடி இழை படகுகள் விட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  இதேபோல் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் ஏதாவது ஒரு இடத்தில்  பூங்கா ஏற்படுத்தி இசை நீருற்று, அலங்கார மீன் கண்காட்சியகம், மற்றும் சிறுவர்களுக்கான சிறிய ரயில், செயிண்ட் வீல், பெரிய ராட்டினம், கேன்டீன் போன்றவை அமைத்தால் ஏராளமான சுற்றுலா பயணிகளை கவர முடியும்.இது வரை அரசு சார்பில் தொழில் வாய்பை ஏற்படுத்தும் எந்த ஒரு திட்டமும் கீழக்கரையில் செயல்படுத்தபடவில்லை.ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட  திட்டத்திலாவது கீழக்கரை இணைக்கப்பட்டு இப்பகுதியில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை.மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ள கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தி சுற்றுலா தலமாக்கும் திட்டத்தில் கீழக்கரையையும் இணைக்க வேண்டும்

கீழக்கரை கலங்கரை விளக்க பகுதியை  சுற்றுலாவுக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பட்ஷத்தில்  இப்பகுதியில் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .மேலும் கடல் பகுதி சுத்தாமவதற்கும் வாய்ப்பாகும்.மக்கள் பிரதிநிதிகள்  மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்..
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.