Wednesday, September 14, 2011

கலவரத்தால் திண்டாடியவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் உதவி!

பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ் போக்குவரத்து முடங்கியதால் வெளியூர்களில் இருந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் வந்த‌வர்கள் பலர் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் செய்வதறியாது தவித்தனர்.இதனையறிந்த‌ ராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த ஜமாத்தினர், மனித நேய மக்கள் கட்சியினர், சி.ஐ.டி.யு., அமைப்பினர், அவர்களை சின்னக்கடை பகுதி பள்ளிகளில் தங்க வைத்தனர். இந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் குறிப்பாக அப்பகுதியில் உள்ள‌ இஸ்லாமியர்கள் ஒவ்வொரின் வீடுகளிலிருந்தும் சமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அடுத்த நாளும் அனைவருக்கும் உணவு வழங்கினர். பின்னர் அரசு வாகனங்கள் மூலம் அருகேயுள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.பாதிப்ப‌டைந்த‌வ‌ர்கள் மிகுந்த‌ நெகிழ்ச்சியுடன் உதவிய‌‌ அனைவ‌ருக்கும் ந‌ன்றி தெரிவித்து சென்ற‌ன‌ர்

2 comments:

  1. திரும்பிய திசைகளிலெல்லாம் சுயநலமும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகில், இன்னமும் நாலு நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் - ஆறுதல்!! மனித நேயமிக்க செயல்!! பாராட்டப்பட வேண்டிய செயல்!!

    ReplyDelete
  2. மனித நேயமிக்க செயல்!! பாராட்டப்பட வேண்டிய செயல்!!

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.