Friday, September 2, 2011

கீழக்கரையில் தடையை மீறி செயல்படும் உள்ளூர் சேனல்கள் ! முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் எதிர்ப்பு


தமிழகத்தில் அரசு கேபிள் நிறுவனம் செயல்பட இருப்பதை தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் உள்ளூர் சேனல்களுக்கு தமிழக அரசு கடந்த மாதம் முதல் தடை விதித்து விட்டது இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் செயல் பட்டு வந்த உள்ளூர் சேனல்கள் பெரும்பாலனவை நிறுத்தபட்டு விட்டதாக கூறப்படுகிறது. அரசின் தடையை மீறி கீழக்கரையில் நான்கு உள்ளூர் சேனல்கள் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் ஜஹாங்கிர் அரூஸி கூறியதாவது, சித்த வைத்தியம் ,மாந்திரீகம், போன்ற போலி வியாபார ஸ்தாபனங்கள் விளம்பரங்களை வெளியிட்டு மக்களை திசை திருப்பும் உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பை அரசு தடை செய்துள்ளது ஆனால் கீழக்கரையில் தடையை மீறி உள்ளூர் சேனல்கள் இயங்கி வருவது வியப்பையளிக்கிறது. என்றார்.

ராமநாதபுரம் தாசில்தார் சுந்தரமூர்த்தி கூறியதாவது, கீழக்கரையில் ஆய்வு செய்து உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்றார்


No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.