Sunday, September 4, 2011

பெண்களை கேலி செய்தாக தகராறு ! வாலிபர் காயம் ! 5 பேர் மீது வழக்கு


கீழக்கரை அருகே 500 பிளாட் பகுதியில் இடத்தில் பள்ளிவாசல் அருகே நின்று கொண்டு வழியில் போகும் பெண்களை கேலி செய்ததாகவும் ,தட்டி கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
கீழக்கரை 500 பிளாட் பள்ளிவாசல் அருகே அதே பகுதியை சேர்ந்த சுல்தான் மகன் பாதுஷா அவருடைய சகோதரர் சாகுல் ஹமீது,கலீல் ரஹ்மான் மகன் பாசில்,அவரது சகோதரர் ஜமீல்,மற்றும் ராஜா ஹீசைன் ஆகியோர் அப்பகுதியில் நின்று கொண்டு பெண்களை கேலி செய்ததாகவும் இதை அதே பகுதியை சேர்ந்த ஹைதர் அலி மகன் முகம்மது செய்யது ஹசன் தட்டி கேட்டதாகவும் ஹசன் தரப்பில் கூறப்படுகிறது.5 பேரும் சேர்ந்து ஹசனை கிரிக்கெட் ஸ்டெம்பால் அடித்ததில் கண்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து கீழக்கரை காவல் நிலையத்தில் முகம்மது செய்யது ஹசன் புகார் செய்ததின் பேரில் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்கு பதிவு செய்து 5 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.

காயம் அடைந்த ஹசன் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்


பட விளக்கம் : இன்ஸ்பெக்டர் இளங்கோவன்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.