Saturday, September 3, 2011

வெளிமாநில பஸ் மோதி பெண் பலி ! நிற்காமல் சென்ற பஸ்சை பிடித்த போலீசார் !



கீழக்கரை செய்யது ஹமீதா அரபிக் கல்லூரி அருகே நடந்த விபத்தில் பெண் பலியானார்.கீழக்கரை அருகே சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி மனைவி மலர்(30) இவர் சம்பவத்தன்று குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு இரவு வீடு திரும்பிய போது செய்யது ஹமீதா கல்லூரி அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருச்செந்தூர் சென்று கொண்டிருந்த வெளிமாநில பஸ் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் மீது நிற்காமல் சென்ற பஸ்குறித்து அருகில் நின்றவர்கள் ஏர்வாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததால் ஏர்வாடி தனிபிரிவு ஏட்டு செல்வராஜ்,சப் இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் பஸ்சை ஏர்வாடி அருகே மடக்கி பிடித்து டிரைவர் மேற்கு வங்காள டிரைவர் சேக் அக்தர் அலி (43) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.