Friday, September 23, 2011

பரமக்குடி கலவரம் !அப்பாவிகள் என்று அறியபட்டால் வழக்குகள் வாபஸ்! டி.ஐ.ஜி. ரவிக்குமார்




கீழக்கரை காவல் நிலையத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி ரவிக்குமார் தலைமையில் எஸ்.பி காளிராஜ் மகேஸ்குமார் மற்றும் டிஎஸ்பி முனியப்பன் முன்னிலையில் தலித் கிராம கிராம தலைவர்கள் கருத்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


பரமக்குடியில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரத்தை தொடர்ந்து பல்வேறு இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தன .கீழக்கரை பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மீது கல்வீச்சி நடந்தது. இது தொடர்பாக போலீசார் பல்வேறு கிராமங்களில் சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களை தேடி சென்றனர்.

இதற்கு பெண்கள் எதிர்ப்பை வெளிபடுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்ததை தொடர்ந்து கீழக்கரையை சுற்றியுள்ள ஏர்வாடி,சிக்கல் ,உத்தரகோஷமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளில் உள்ள தலித் கிராமதலைவர்களை அழைத்து கருத்தாய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகளை வழங்கினர்.

கிராம தலைவர்களின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இந்த கூட்டம் 90 நிமிடங்கள் நடைபெற்றது.முன்னதாக பரமக்குடியில் நடந்த துப்பாகி சூட்டில் பலியானவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இது குறித்து தஞ்சை சரக டிஐஜி ரவிக்குமார் கூறுகையில்,

மாவட்டத்தில் அமைதி ஏற்பட்டு பொது மக்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாருடன் மக்களின் நட்பை வலுபடுத்தும் விதமாக மக்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தையும் அச்சத்தையும் போக்குவதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சமூக தலைவர்கள் விடுத்த கோரிக்கைகளில் நியாயமானைவை குறித்து பரீசிலிக்கப்படும். மேலும் யார் மீதும் தவறாக வழக்குகள் போடபட்டிருந்தால் வழக்குகளை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.