Wednesday, September 21, 2011

வாலிபால் போட்டி! கீழக்கரை சதக் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன்!


கீழக்கரை சதக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் தமிழகமெங்கும் உள்ள ஏராளமான கல்லூரிகள் கலந்து கொண்டன. இப்போட்டியை கல்லூரி முதல்வர் அலாவுதீன் தொடங்கி வைத்தார். முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல் இடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது .திருப்பத்தூர் விவேகனந்தா பாலிடெக்னிக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் பிடித்தது வெற்றி பெற்ற அணிகளுக்கு சதக் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் யூசுப் சாகிப் பரிசளித்து பாராட்டினார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.