Monday, September 5, 2011

கீழக்கரை ஹமீதியா பள்ளி அருகே தோட்டத்தில் பெயிண்டர் தற்கொலை !



ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதிய உயர்நிலை பள்ளி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் குடியிருந்து வந்த திருப்புலாணி வீரன் வலசையை சேர்ந்த வெல்லத்துரை மகன் ஆறுமுகம் (35) குடும்ப தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவர் கடந்த 9 வருடமாக இந்த தோட்டத்தில் குடியிருந்து வருகின்றனர்.இவருக்கு ராணி(32) என்ற மனைவியும் அருண்குமார்(14) அசோக்குமார்(9) என்ற 2 மகன்களும் உள்ளனர்.சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்ததாகவும் இதை அவர் மனைவி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.இதில் மனம் உடைந்த அவர் தான் குடியிருந்த தோட்டத்திலேயே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன் ,தனிப்பிரிவு ஏட்டு செல்வராஜ், ஆகியோர் இறந்தவரின் உடலை கைப்பற்றி கீழக்கரை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட விளக்கம் : தூக்கு போட்டு உயிரழந்த ஆறுமுகம்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.