Wednesday, September 21, 2011

கீழக்கரை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக விருப்ப மனு !


உள்ளாட்சி தேர்தல் தேதி அக்டோபர் 17 மற்றும் 19ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே கீழக்கரை நகராட்சி மகளிருக்கு ஒதுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே இந்நிலையில் அதிமுக சார்பில் ராபியத்துல் காதரியா நகராட்சி தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படாத நிலையில் திமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக போட்டியிட கீழக்கரை என்.எம்.டி தெருவை சேர்ந்த எம்.தாஜீனிசா நூர்தீன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சேகு நூர்தீன் அவர்களின் மனைவியான இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார்.வாணியம்பாடி மதராஸவில் ஆலிமா பட்டம் பெற்றுள்ளார்.கீழக்கரை அனைத்து பெண்கள் மதரஸாக்களின் தலைவியாக உள்ளார். சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் ஹமீதிய மெட்ரிக் பள்ளியின் பெற்றோர் கழக உறுப்பினராக உள்ளார். தந்தையார் பெயர் முகம்மது மீரசாகிபு ஆகும் .
இவரே திமுக சார்பில் கீழக்கரை நகராட்சி தலைவி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்தன

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.