Friday, September 2, 2011

மஹ்துமியா மற்றும் இஸ்லாமியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விருது



கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லு�ரியில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா, துரோணாச்சாரியர் விருது வழங்கும் விழா நடந்தது. கல்லு�ரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். கல்லு�ரி சிறப்பு இயக்குநர் யூசுப்சாகிப் முன்னிலை வகித்தார். பிரபாகரன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார்.
ராமநாதபுரம் ரோட்டரி சங்க தலைவர் முனியசாமி, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரோட்ராக்ட் புதிய தலைவராக ரஞ்சித் மணிகண்டன், செயலாளராக கார்த்திக் பொறுப்பேற்று கொண்டனர்.
மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்கள் கீழக்கரை இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, மஹ்து�மியா தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி, ராஜசூர்யமடை ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அபிராமி, காரிகோட்டம் ஊராட்சிப்பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுச்சாமி, ஆசிரியர் மோகனதாஸ் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் ரோட்டரி சங்க மாவட்ட துணை ஆளுநர் தினேஷ்பாபு, கல்லு�ரி சிறப்பு இயக்குநர் யூசுப் சாகிப், ரோட்டரி சங்க பார்த்தசாரதி, ரோட்ராக்ட் ஆலோசகர் மரியதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.