Monday, September 12, 2011

கால்பந்து போட்டியில் கீழக்கரை கல்லூரி அணி சாம்பியன்!



திருச்சி அண்ணா பல்கலைகழக மண்டல‌ அளவிலான கால்பந்து போட்டியில் கீழக்கரை சதக் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம் ,சிவகங்கை ,திண்டுக்கல் ,தேனி,மதுரை,ஆகிய மாவட்டத்தில் உள்ள 16 பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன .இறுதி போட்டியில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியும், முகம்மது சதக் பொறியியல் கல்லூரியும் விளையாடியதில் 4- 3 என்ற கோல் கணக்கில் முகம்மது சதக் கல்லூரி வெற்றி பெற்றது.வெற்றி பெற்ற வீரர்களை கல்லூரியின் சேர்மன் ஹமீது அப்துல் காதர்,செயலாளர் ஹபீப் சாகிப்,சிறப்பு இயக்குநர்கள் யூசுப் சாகிப்,ஹபீப் சதக்கத்துல்லா ,முதல்வல் முகம்மது ஜகபர் ஆகியோர் ஆகியோர் பாரட்டினர்.மேலும் உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்,முதன்மை பயிற்சியாளர் சிக்கந்தர்,துரை மக்கள் தொடர்பாளர் நஜிமுதீன் ,சத்தியேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டனர்.

பட விளக்கம்: கீழக்கரையில் நடைபெற்ற வெற்றி பெற்ற கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கல்லூரி இயக்குநர் ஹ்பீப் சதக்கத்துல்லா .

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.