Friday, September 23, 2011

6 பேர் மீது வரதட்சனை வழக்கு ! கணவர், மனைவி கைது !



இன்ஸ்பெக்டர் விமலா

கீழக்கரையில் கூடுதல் வரதட்சனை கேட்டதாக கூறி முதல் மனைவி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கணவரையும் 2வது மனைவியையும் கைது செய்து மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கீழக்கரை 500 பிளாட்டை சேர்ந்த வாஹிதா பானு(30) இவருக்கும் இதே ஊரை சேர்ந்த வடக்குத்தெருவை சேர்ந்த செய்யது முகம்மது மகன் ஜகுபர் சாதிக்(35) என்பவருக்கும் 1998ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

1லட்சத்து 80 ஆயிரம் வரதட்சனையாகவும்,நகை மற்றும் வீடு சீதனமாகவும் கொடுக்கப்பட்டதாக பெண் தரப்பில் கூறப்படுகிறது. இவர்களுக்கு 10 வயதிலும்,5 வயதிலும் பெண் குழந்தைகள் உள்ளனவாம். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக மேலும் 50ஆயிரம் கேட்டு தன்னை கொடுமைபடுத்தியதாகவும் மேலும் பணத்தை கொடுக்க மறுத்ததால் ஹாமிலத்து சமீமா (24) என்ற பெண்னை 2வது திருமணம் செய்து அழைத்து வந்து கீழக்கரையில் குடும்பம் நடத்திவருவதாகவும் முதல் மனைவி வாஹிதா பானு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் மகளிர் காவல் துறை இன்ஸ்பெக்டர் விமலா இது குறித்து விசாரணை செய்து கணவர் ஜகுபர் சாதிக்,அவரின் தாயார் ,சகோதரி, சின்னதாயார்,மாமா 2வது மனைவி ஹாமிலத்து சமீமா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கணவி ,2வது மனைவி இருவரையும் கைது செய்தனர் மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.