Thursday, August 15, 2013

வேலைவாய்ப்பு தகவல் பரப்பு கூட்டம் !


நிகழ்ச்சியில் சுற்றுப்புறத்தை  பாதிக்காத பனை ஒலையால் செய்யப்பட்ட கூடை ,பை போன்ற   பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.



 
மாவட்ட தொழில் மையம் சார்பாக வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஊக்குதவி திட்டம், சலுகை கள், மானியங்கள் குறித்த தகவல் பரப்பு கூட்டம் கீழக்கரையில் நடைபெற்றது.
 
முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த கூட்டத்திற்கு கல் லூரி முதல்வர் அலாவுதீன் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ஞானசேகரன், காரைக்குடி சிக்ரிவேதியியல் ஆராய்ச்சி மைய முதன்மை அறிவியல் அறிஞர் ராஜசேகர் மற்றும் அவரது குழுவினர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக கள அதிகாரி நாராயணன், மாவட்ட மகளிர் திட்டம் இணை இயக்குநர் பூங்குழலி. நம்பிக்கை மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
பேராசிரியர் யோசுவா வரவேற்றார். முதல்வர் அலாவுதீன் பேசுகையில், ‘குறு, சிறு, தொழில் செய்ய விரும்புபவர்கள் மற்றும் பெரிய தொழில் செய்ய விரும்புவோருக்கு கடன் உதவி பெறுவது குறித்த வழிமுறைகள் குறித்து பேசினார்.
 
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுப்ரமணியன், செல்வநாயகன், ஹசன், ஆசாத், டாக்டர் ராசிக்தீன், மூர் ஹசனுதீன் மற்றும் சித்தார்கோட்டை, பனைக்குளம், கும்பரம். உத்தரகோசமங்கை. ஆலங்குளம். ஏர்வாடி மற்றும் கீழக்கரையைச் சேர்ந்த பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மாவட்ட தொழில் மைய அலுவலர் ரபீக் நன்றி கூறினார்.

2 comments:

  1. kilakarai Niraya Penkal Padithum Athan Muzham entha payanum indri irukkindrrkal,kilakarai neraya penkal pallikudam(schoolkal) , penkal kallurikal,(college)irunthu entha payanum illai, ethan muzham velai vaipo ethu kidaipathillai,
    Penkalukkana Thozhil vaippu Earpatutha vendum
    Penkalukkana Teacher Training College open seiya vendum

    ReplyDelete
  2. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.