Tuesday, August 20, 2013

கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற முப்பெரும் விழா !பல்வேறு துறையினருக்கு விருது!



கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக நடைபெற்ற, மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கும் விழா, சிறந்த சேவை மற்றும் சாதனையாளருக்கு விருதுகள் வழங்கும் 'முப்பெரும் விழா'  நிகழ்ச்சி, நேற்று (18.08.2013) ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணியளவில் ஹுசைனியா திருமண மண்டபத்தில்  நடை பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் சுந்தரராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக அ.இ.அ.தி.மு.க  மாவட்ட கழக செயலாளர் மற்றும் தமிழ் நாடு சேமிப்புக் கிடங்கு வாரியத் தலைவர். முனியசாமி மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்  கண்ணன் ஆகியோர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர் நல இயக்கத்தின் தலைவர். செய்யது இபுறாகீம் லைமை ஏற்றிருந்தார்

கீழக்கரை நகர் நல இயக்கத்தின் செயலாளர் சேகு பசீர் அஹமது  வரவேற்புரை ஆற்றினார். கீழக்கரை நகர் நல இயக்கத்தின் நிறுவனர்..ஹமீது அப்துல் காதர்  அறிமுக உரை ஆற்றினார். அதனை தொடர்ந்து கீழக்கரை நகர் நல இயக்கத்தின் சார்பாக சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வரஅலாவுதீன், மக்கள் தொண்டு நிறுவன  தலைவர் உமர்,முன்னாள் எம்.எல்.ஏ ஹசன் அலி,கீழக்கரை நகர் அ.இ.அ.தி.மு.க  செயலாளருமான . இராஜேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையாற்றினர். இந்த விழா நிகழ்ச்சியில் கீழக்கரை நகரில் சிறப்பான முறையில் சேவையாற்றி வரும் பொதுநல அமைப்பினர்களுக்கு சேவை விருதுகளும், சாதனை விருதுகளும், சாதனையாளர் விருதும், சிறந்த பள்ளிகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.

விழாவின் இறுதியில் நன்றியுரையை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணை செயலாளர். . செல்வ நாராயணன் அவர்கள் வழங்கினார். நிகழ்ச்சிகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் துணைத் தலைவர். பாரதி மற்றும் உறுப்பினர் .முஹம்மது சாலிஹ் ஹுசைன் ஆகியோர்கள் தொகுத்து வழங்கினர்.

 விழா ஏற்பாடுகளை கீழக்கரை நகர் நல இயக்கத்தின் பொருளாளர் .ஹாஜா அனீஸ்  செய்திருந்தார்.

  நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் நல இயக்கத்தின் அங்கத்தினர்கள் விஜயன், கெஜி உள்ளிட்ட நிர்வாகிகள், கீழக்கரை நகரிலுள்ள அனைத்து பள்ளிகளின் தாளாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியப் பெருந்தகைகள், பல்வேறு பொது நல அமைப்புகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இஸ்லாமியா பள்ளிகளின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டி விருது  வழங்கப்பட்டது.பள்ளியின் முதல்வர் மேபல் ஜஸ்டிஸ் விருதை பெர்றுக்கொண்டார்




கீழக்கரையில் சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளர்களால், கடந்த 1986 ஆம் ஆண்டு பைத்துல் மால் உருவாக்கப்பட்டது. பின்னர் 1989 ஆம் ஆண்டு பைத்துல் மாலின் நிரந்தர கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 1990 ஆம் வருடம் பண்பாளர். B.S.A.அப்துல் ரஹ்மான் அவர்களால், பிரபுக்கள் தெரு பகுதியில் திறப்பு விழா கண்டு, இன்றளவும் தொய்வின்றி சேவையாற்றி வருகிறது. இதனை கவுரவிக்கும் வகையில் கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

 விருதினை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. S .சுந்தரராஜ் அவர்களிடம் இருந்து, கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் அமைப்பின் செயலாளர் ஜனாப். முகைதீன் தம்பி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

'கீழை இளையவன்' என்ற சாலிஹ் ஹுசைனுக்கு  'சிறந்த சாதனையாளர்' விருதை - அமைச்சர்  சுந்தரராஜன் வழங்கினார்

கீழக்கரை நகரின் சுத்தம், சுகாதாரம் மேம்படவும், கீழக்கரையில் நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, அனைத்து சமூக நல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து செயல் படுவதற்காகவும், கீழக்கரை இளைய சமுதாயத்தினர் மத்தியில் கல்வி, அரசுத் தேர்வுகள், வேலை வாய்ப்பு, விழிப்புணர்வு போன்ற பதிவுகளை இணைய தளங்கள் வழியாகவும், சமூக வலை தளங்கள் வாயிலாகவும் உலகெங்கும் வாழும் கீழக்கரை மக்களுக்கு, தொடர்ந்து கொண்டு செல்லும் சேவையை பாராட்டி, கீழை இளையவன் வலை தள நிறுவனர்.  A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைனுக்கு சிறந்த சாதனையாளர் விருதினை, கீழக்கரை நகர் நல இயக்கம் சார்பாக அமைச்சர் சுந்தரராஜ் வழங்கி கவுரவித்தார்.

 

3 comments:

  1. Kilakarail innum Niraya Madramkal Seiya Padavenum
    1,Arasu Nala thidamkal kilakarai Makkalai Sendru Adaivathilai (kitaipathilai)
    2,Kilakarail ,Sukatharam inmai Athikamaka Nilaukindrathu
    3,Penkalukkana Thozhil vaippu Earpatutha vendum
    4,Penkalukkana Teacher Training College open seiya vendum
    5,Vallal sithakathir salai (Main Road ) Viriu Patutha Vendum.
    Madrum Main Roadil Irinthu Puthiya Bus Nilayam Sellum Salai ,Muslim Bazzar Salai , Mukkiya Salaikal Anaithum Viriu Padutha Pada vendum,
    Kilakarai Market sellum Pathaikalai Viru padutha Pada Vendum.
    6,Kadal Karai Areavil Poluthupokku Parkku Urvakkapata Vendum, ithan mulam Tourist Varukai athikam Patuthai, Kilakarail , Thozhil Valam Earpatutha Mudium.
    7,Kilakarai Nakaradchil Makkal Pukar Petti(Complain Box) Vaithu,weekly Narar Mandram Uripinarkal Munnilail Makkal Complain Letter Patithu Atharkku Reply Seiya Vendum.
    8,Kilakarail Viraivil Thani Thaluga Office Open Seiya Vendum,
    Evai Anaithum Earpaduthatha Varaium , Entha Oru Thani Manithanum, Entha Oru Teamum Kilakarail Eathaium Sathithu vivadavillai,
    Medail (Stage) irupavarkal Ellorum Nalla Drama Nadikarkal Pondru Enakku Thondrikindrathu !!!
    Award koduppathu, Makkalai Eamadrum , Kan Thudaippu Nadakam!!!

    ReplyDelete
  2. Kilakarail innum Niraya Madramkal Seiya Padavenum
    1,Arasu Nala thidamkal kilakarai Makkalai Sendru Adaivathilai (kitaipathilai)
    2,Kilakarail ,Sukatharam inmai Athikamaka Nilaukindrathu
    3,Penkalukkana Thozhil vaaippu Earpatutha vendum
    4,Penkalukkana Teacher Training College open seiya vendum
    5,Vallal sithakathir salai (Main Road ) Viriu Patutha Vendum.
    Madrum Main Roadil Irinthu Puthiya Bus Nilayam Sellum Salai ,Muslim Bazzar Salai , Mukkiya Salaikal Anaithum Viriu Padutha Pada vendum,
    Kilakarai Market sellum Pathaikalai Viru padutha Pada Vendum.
    6,Kadal Karai Areavil Poluthupokku Parkku Urvakkapata Vendum, ithan mulam Tourist Varukai athikam Patuthai, Kilakarail , Thozhil Valam Earpatutha Mudium.
    7,Kilakarai Nakaradchil Makkal Pukar Petti(Complain Box) Vaithu,weekly Nagar Mandram Uripinarkal Munnilail Makkal Complain Letter Patithu Atharkku Reply Seiya Vendum.
    8,Kilakarail Viraivil Thani Thaluga Office Open Seiya Vendum,
    Evai Anaithum Earpaduthatha Varaium , Entha Oru Thani Manithanum, Entha Oru Teamum Kilakarail Eathaium Sathithu Vidavillai,
    Medail (Stage) irupavarkal Ellorum Nalla Drama Nadikarkal Pondru Enakku Thondrikindrathu !!!
    Award koduppathu, Makkalai Eamadrum , Kan Thudaippu Nadakam!!!

    ReplyDelete
  3. MLA கீழக்கரைஇல் ஆய்உ செய்யம் பொது எல்லாம் அது செய்வேன் இது செய்வேன் என்று சொல்வது வெறும் வாய் சாவட மட்டும் தான் அனால் ஒன்னும் நல்லது நடக்காது மக்களுக்கு ,

    1,மக்கள் வசிக்ககுடிய பகுதில் குப்பைகள் கொட்டபடுகிறது இது காலம் காலமாக நடக்கிறது,இதனால் பல நோய்கள் பரவுகிறது, இதற்க்கு ஏரியா MLA என்ற விதத்தில் வேறு வழி கண்டரா , நம்ம MLA?
    2,கீழக்கரை இல் தனி தாலுக்க அக்கபோறேன் சொன்னார் , இப்ப தனி தாலுக்க ஆபீஸ் என்ன ஆச்சு ?
    3,கீழகரைல் அணைத்து பகுதியும் குறிகிய பாதையாக இருக்கின்றது ,வாகனம் செல்லுவதற்கு மிக அதிகமான இடையுறு ஏற்படுகிறது, இதற்க்கு ஏதும் தீர்வு கண்டரா நாம் MLA ?
    4,கீழகரைல் சுற்று பரப்பு பெரிதாகி விட்டது (ஊரு பெரிதாகி விட்டது , மக்கள் தொகையும் அதிகமாகி விட்டது ) மக்கள் முக்கியமான பகுதிக்கு சென்று வர,மார்க்கெட் ,மீன் மார்க்கெட், போலீஸ் ஸ்டேஷன் , பேங்க் ,போஸ்ட் ஆபீஸ் , HOSPITAL,கடல்கரை ,ஸ்கூல்,காலேஜ் ,மசூதி,கோவில் ,சர்ச் ,ஆகிய பகுதிக்கு செல்ல,மினி பஸ் உண்ட ?அதற்கும் ஏதும் வழி கண்டரா MLA?
    5,கீழகரைல் டிகிரி படித்த பெண்கள் அதிகம் ,படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த ஏதும் நடவடிக்கை எடுத்தாரா MLA? ஒரு டீச்சர் ட்ரைனிங் காலேஜ் ஓபன் செய்வதற்கு குரல் கொடுத்தாரா நமது MLA?
    6,நமது ஊரில் உள்ள இளைய தலை முறைனர் எத்தனை நபருக்கு தொழில் வாய்ப்பு உதவி செயதார்?, அரசிடம் இருந்து தொழில் வாய்ப்பு பெட்று கொடுத்தாரா MLA?
    7,கீழகரைல் தொழ்லில் வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்தார் ? என்ன சாதித்தார் MLA?
    ஆயுஉ செய்கிறேன் ஆயு உ செய்கிறேன் என்று ஏன் வீண் பந்தா? நமது MLA க்கு ,ஏதும் சாதிக்க போவதில்லை என்பது மட்டும் நல்லா புரிகிறது கீழக்கரை மக்களுக்கும் , அவருக்கும் ,

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.