Monday, August 19, 2013

டாக்டர். அப்துல்லா (பெரியார்தாசன்) காலமானார்! கீழக்கரையை சேர்ந்தோர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல்!


சென்னையில் டாக்டர் அப்துல்லா (பெரியார்தாசன்) காலமானார். 63 வயதான  இவர் உடல்நலம் சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இவர் கேம்பிரிட்ஸ் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழக்கரையை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.


சமீபத்தில் கீழக்கரையில் நடைபெற்ற மீலாத் வீழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த படங்கள்

 அஸ்வான் அமைப்பின் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான ராஜாக்கான் வெளியிட்ட அறிவிப்பில்.....

நேற்று இரவு அப்துல்லா (பெரியார்தாசன்) உடல்நிலை மோசமாக இருப்பதாக முகப்புத்தகத்தில் பார்த்தேன்...இன்று காலை கண் விழித்த போது அவர் இறையடி சேர்ந்தார் எனக் கேட்டு மனது சொல்ல இயலாத சோகத்தில் தவிக்கிறது.. 'நீங்களெல்லாம் இஸ்லாத்திற்கு வந்தது �By Chance நான் வந்ததோ By choice' என்று அடிக்கடி சொல்வார்...அப்படி இஸ்லாத்திற்கு வந்த அவர்,அழைப்பு பணியில் குறுகிய காலங்களில் மகத்தான சேவைகளை செய்தவர்...சமீபத்தில் துபாய் வந்த போது கூட இது சம்பந்தமாக அவர் செய்ய இருந்த சில குறும்படங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அவர் பயணம் கிளம்பும் முன்பாக ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் அவரை சந்தித்து விடை பெற்ற போது நான் நினைக்க வில்லை..இது கடைசி சந்திப்பென்று... எல்லாவற்றிற்கும். அல்லாஹ், போதுமானவன்...எல்லாம் வல்லோன் அவர் தம் பாவங்களை மன்னித்து சுவர்க்க புரியில் அவருக்கு ஓர் உயரிய பதவியை அளிக்க துவா செய்கிறேன்...ஆமீன்... நண்பர்களையும் அவருக்காக துவா செய்ய  வேண்டுகிறேன்

1 comment:

  1. Kilakarail Jamathu Thalivarkal Thernthu Etukkum Murai Palaiya Muraiye Pinpaddra Padukindrathu , Ethu Kanmudithanamana Muraiyakum, Immurai Thadukkapaduvathodu Marukkapada vendiyathu,
    Konmudithanamaka Jamath Thalaivarkal Thervu Seivathal Arivinar Thalaivarum , Samuthaya nalan illathavrum Thalaivaraki Vitukindrarkal,
    Jamath Enpathu jamath Makkalal Urvakka Pattu Makkalal Vzhinadathi Sella Padaventiyathu
    Oru jamath thalaivar therthu etukkum pothu anth jamathai sertha anaithu vidukalilum, viddukku oru memeperukku jamath thalaivarai therthedukkum vaakku Urimai Koduka Pada Venum (Entha vakku alikkum urimai 3 varudathirkku oru murai antha vidil ulla 18 vayathu nirampiyavarkal aan,penkal anavarukkum madri kodukkalam)
    Thalavarkal madrum indri jamath uripinarkal kuda intha murail thervu seiyalam
    Jamthairkku Varum Kudumba Pirachanaikalai Jamathu Vakku Urimai Naparkali Mulam Pirachanakku Thirvu, Vakku Mulzhama Sekarithu Thir ppu Vazhakalam,
    Oor Pirachanaiyaka irunthal weekly, allathu monthly oru murai anaithau jamathu mandrum uripinarkal serthu pirachanaikku thirvu kanalam.

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.