Friday, December 23, 2011

கீழக்கரை சாலைகளில் உறிஞ்சும் குழாய்கள் மூலம் கழிவுநீர் அகற்றம் !






கீழக்கரையில் பல்வேறு சாலைகளில் கழிவுநீர் தேங்கி குளம் போல் காணப்பட்டது.இதை உடனடியாக அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையின் பேரில் உறிஞ்சும் குழாய்கள் பொருத்தப்பட்ட லாரிகள் மூலம் சாலைகளில் உள்ள கழிவு நீர் அகற்றப்பட்டு வருகிறது.


இது குறித்து மஹ்மூது சுல்தான் என்பவர் கூறுகையில்,நகராட்சி சார்பில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட‌ தற்காலிக நடவடிக்கைக்கு நன்றி .அதேநேரத்தில் கழிவு நீர் சாலைகளில் தேங்காமல் இருப்பதற்கு சாலைகளை சீராக அமைத்தல்,சாலை ஓரங்களில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களை பராமரித்தல்,போன்றவற்றை கண்காணித்தால் இது போன்ற சூழ்நிலை ஏற்படாது.எல்லாவற்றிர்க்கும் மேலாக நீண்ட கால திட்டமான‌ பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.