Monday, December 12, 2011

நகராட்சி தலைவர் மீது குற்றச்சாட்டு !நகராட்சி தலைவர் மறுப்பு


நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா


18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம்


கீழக்கரை 18வது வார்டு கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கீழக்கரைக்கு செல்வந்தர்களின் அழைப்பின் பேரில் வருகை தந்த புரிந்த மலேசியாவின் மலேசியாவின் சரவாக் மாநில முதல்வர் அப்துல் தையூப் முகம்மது கீழக்கரை நகராட்சிக்கு வருகை புரிய இருப்பதாகவும் ,மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க இருப்பதாகவும் இதற்காக அனைத்து உறுப்பினர்களும் நகராட்சி அலுவலகத்துக்கு வர வேண்டும் என சேர்மன் ராபியத்துல் காதரியா அவர்கள் தொலைபேசியின் வாயிலாக அழைத்ததின் பேரில் சேர்மன் அவர்களுக்கு மதிப்பளித்து பல பெண் உறுப்பினர்கள் உள்பட பெரும்பான்மையான கவுன்சிலர்கள் தங்கள் அலுவல்களை விட்டு விட்டு பகல் 12 மணியிலிருந்து அலுவலகத்தில் கூடினர்.

சுமார் 1.30 மணியளவில் நகராட்சி வழியாக வருகை புரிந்த மலேசியாவின் விருந்தினர்களுக்கு சேர்மன் ராபியத்துல் காதரியா அவர்கள் மரபை பின்பற்றாமல் சாலையிலேயே வரவேற்பு அளித்தனர்.அவருடன் அவருக்கு வேண்டிய நபர்கள் மட்டுமே விருந்தினர்களுக்கு சால்வை போற்ற அனுமதிக்கப்பட்டனர். சுமார் 5 நிமிடங்கள் சாலையிலேயே வரவேற்பு முடிந்து நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஆணையர் அறைக்கு விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.சேர்மன் அவர்களும் அவருக்கு வேண்டியவர்கள் மட்டுமே ஆணையர் அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சேர்மன் அவர்களால் அழைக்கப்பட்ட கவுன்சிலர்கள், தங்களை அழைத்து அறிமுகம் செய்வதுடன்,ஊர் நலனை பற்றி கலந்தாய்வு கூட்டம் நடைபெறும் ஊரின் நலன்கள் பற்றி பேசலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால் ஆணையர் அறையில் இருந்த அவர்கள் சில நிமிட நேரங்களிலேயே தன் சகாக்களுடன் தன் வாகனங்களை நோக்கி சென்றார்கள்.இதனால் அனைத்து கவுன்சிலர்களும் செய்வது அறியாது திகைத்து நின்றனர்.

இதனால் மனம் குமுறிய கவுன்சிலர்கள் சேர்மன் அவர்களிடம் "எதற்காக எங்களை அழைத்தீர்கள் இச்சம்பவம் எங்களை மனம் புண்பட வைத்து விட்டது "என்றோம் அதற்கு சேர்மன் ராபியத்துல் காதரியா "கீழக்கரைக்கு வந்த சிறப்பு விருந்தினர் நகராட்சி அலுவலகத்திற்கு வரும் திட்டம் இல்லை என்றும், நாங்கள்தான் வற்புறுத்தி வழியில் அழைக்க ஏற்பாடு செய்தோம்" என கூறினார்.

நகராட்சி அலுவலகத்திற்கு வர திட்டம் இல்லாத கெளரவ அழைப்பாளரை ஏன் வற்புறுத்தி நகராட்சி அலுவலகம் முன் நிறுத்தி நெறிமுறைக்கு அப்பாற்ப்பட்டு வரவேற்க வேண்டும்.?எதற்காக கவுன்சிலர்களை அழைக்க வேண்டும்? புரியாத புதிராக உள்ளது.
இனி வ‌ருங்கால‌ங்க‌ளிலாவ‌து இது போன்ற ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறாம‌ல் விழிப்புட‌ன் இருக்க‌ வேண்டும்.க‌வுன்சில‌ர்க‌ளின் உண‌ர்வுக‌ளுக்கு ம‌திப்ப‌ளிக்க‌ வேண்டும் இவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது,
கீழக்கரைக்கு மற்றொரு நாட்டின் மாநில முதல்வர் வருகை தருகிறார் என்ற அடிப்படையில் அவரை நமது நகராட்சி சார்பாக வரவேற்று கண்ணியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வரவேற்பளித்தோம்.கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதினால்தால் அனைத்து கவுன்சிலர்களையும் அழைத்தேன்.விருந்தினருக்கு துணை தலைவர் உள்பட சில கவுன்சிலர்களும் பொன்னாடை போற்றி கவுரவித்தார்கள்.சூழ்நிலையின் காரணமாக சிறப்பு விருந்தினர் உடனடியாக செல்ல வேண்டும் என்று கூறியதால் அனைவரையும் சிறப்பு விருந்தினர் சந்திக்க இயலாமல் போய் விட்டது. மற்ற‌ப்படி எந்த உள்நோக்கமும் இல்லை ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் இது போன்ற குற்றச்சாட்டுகளை சொல்கிறார் என்று எண்ண தோன்றுகிறது.

8 comments:

  1. அன்புள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் கனிவான வேண்டு கோள்.

    தயவு கூர்ந்து நகர் நலனில் மட்டும் அக்கறை கொண்டு நகருக்கு எல்லா வழிகளிலும் நன்மையான காரியங்களில் ஈடுபட்டு, நகர் நலனுக்காகவும், வார்டு நலனுக்காகவும் பாடுபட்டு "தங்களுக்கு எதாவது நன்மை செய்ய மாட்டர்களா?" என்ற ஏக்கத்தில், எதிர் பார்ப்பில் வாக்களித்த மக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று தயவு கூர்ந்து சிந்தயுங்கள்.

    அதை தவிர்த்து விட்டு , ஒன்றுக்கும் பிரோஜனம் அளிக்காத, உங்களுக்காக வாக்களித்த யாருக்கும் பயனளிக்காத, மாறாக எதிர் மறை விளைவுகளை தோற்றுவிக்கும் தங்கள் வாதங்களால் யாருக்கு நன்மை?

    நல்ல விசயங்களில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு". உங்களை முறையாக அறிமுக படுத்தவில்லே என்பதற்காக இந்த விசயத்தை பெரிது படுத்துவதும் நியாயமானது அல்ல. இப்படித்தான் மக்களவையும், மாநிலங்கள் அவையும் , சட்டசபையும் தேவை அற்ற சிறு பிரச்சனைகளுக்காக மக்கள் பிரச்சனைகளை பேசாமலே முடங்கி விடுகிறது.

    நகர் மன்ற தலைவர் அவர்களும் முறைப்படி நகராட்சி மன்றத்தின் மாடியில் உள்ள ஹாலில் ஐந்து நிமிடம் அனைவரையும் அறிமுக படுத்தி இருக்கலாம். பெரும்பான்மை உறுப்பினர்கள் நம் நகராட்சிக்கு புதியவர்கள். இது போன்ற விசயங்களை எப்படி கையாள்வது என மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற பிரச்சனைகளை சுமூகமாக ஆராய்ந்து, சுயமாக நல்ல முடிவுகளை எடுங்கள்.

    தற்போது கீழக்கரை மக்களின் ஒரே ஏக்கம் "மலேசியா முதலமைச்சரும்,மந்திரியும் இன்னும் ஒரு வாரம் நம் நகரில் தங்கி இருக்க மாட்டர்கள?" என்று தான். ஆம் .... அவர் தங்கி இருக்கும் ஒரு வார காலமும் குப்பை இன்றி, சாக்கடை கழிவுகள் இன்றி, ப்ளீசிங் பவுடர்
    தெளித்து சுத்தமாக இருக்கும் தானே ......... எது எப்படியோ டிசம்பர் முழுவதும் எங்கு நோக்கிலும் சுத்தம் தான்... அதில் மாற்றம் இல்லே.

    இறுதியாக "மலேசியா முதலமைச்சரும்,மந்திரியும் வந்த போது நம் நகரை எப்படி நிர்வகித்து உள்ளீர்களோ.. அதே போல் ஆண்டு முழுவதும் மக்களுக்காக உழைக்க பாடுபடுங்கள். நல்ல உள்ளங்கள் என்றும் உங்களை வாழ்த்தும்.

    அன்புடன்

    கீழை இளையவன்.

    ReplyDelete
  2. அன்புள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஓர் கனிவான வேண்டு கோள்.

    தயவு கூர்ந்து நகர் நலனில் மட்டும் அக்கறை கொண்டு நகருக்கு எல்லா வழிகளிலும் நன்மையான காரியங்களில் ஈடுபட்டு, நகர் நலனுக்காகவும், வார்டு நலனுக்காகவும் பாடுபட்டு "தங்களுக்கு எதாவது நன்மை செய்ய மாட்டர்களா?" என்ற ஏக்கத்தில், எதிர் பார்ப்பில் வாக்களித்த மக்களுக்கு நாம் என்ன செய்யலாம் என்று தயவு கூர்ந்து சிந்தயுங்கள்.

    அதை தவிர்த்து விட்டு , ஒன்றுக்கும் பிரோஜனம் அளிக்காத, உங்களுக்காக வாக்களித்த யாருக்கும் பயனளிக்காத, மாறாக எதிர் மறை விளைவுகளை தோற்றுவிக்கும் தங்கள் வாதங்களால் யாருக்கு நன்மை?

    நல்ல விசயங்களில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு". உங்களை முறையாக அறிமுக படுத்தவில்லே என்பதற்காக இந்த விசயத்தை பெரிது படுத்துவதும் நியாயமானது அல்ல. இப்படித்தான் மக்களவையும், மாநிலங்கள் அவையும் , சட்டசபையும் தேவை அற்ற சிறு பிரச்சனைகளுக்காக மக்கள் பிரச்சனைகளை பேசாமலே முடங்கி விடுகிறது.

    நகர் மன்ற தலைவர் அவர்களும் முறைப்படி நகராட்சி மன்றத்தின் மாடியில் உள்ள ஹாலில் ஐந்து நிமிடம் அனைவரையும் அறிமுக படுத்தி இருக்கலாம். பெரும்பான்மை உறுப்பினர்கள் நம் நகராட்சிக்கு புதியவர்கள். இது போன்ற விசயங்களை எப்படி கையாள்வது என மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இது போன்ற பிரச்சனைகளை சுமூகமாக ஆராய்ந்து, சுயமாக நல்ல முடிவுகளை எடுங்கள்.

    தற்போது கீழக்கரை மக்களின் ஒரே ஏக்கம் "மலேசியா முதலமைச்சரும்,மந்திரியும் இன்னும் ஒரு வாரம் நம் நகரில் தங்கி இருக்க மாட்டர்கள?" என்று தான். ஆம் .... அவர் தங்கி இருக்கும் ஒரு வார காலமும் குப்பை இன்றி, சாக்கடை கழிவுகள் இன்றி, ப்ளீசிங் பவுடர்
    தெளித்து சுத்தமாக இருக்கும் தானே ......... எது எப்படியோ டிசம்பர் முழுவதும் எங்கு நோக்கிலும் சுத்தம் தான்... அதில் மாற்றம் இல்லே.

    இறுதியாக "மலேசியா முதலமைச்சரும்,மந்திரியும் வந்த போது நம் நகரை எப்படி நிர்வகித்து உள்ளீர்களோ.. அதே போல் ஆண்டு முழுவதும் மக்களுக்காக உழைக்க பாடுபடுங்கள். நல்ல உள்ளங்கள் என்றும் உங்களை வாழ்த்தும்.

    அன்புடன்

    கீழை இளையவன்.

    ReplyDelete
  3. எத்தனையோ வேல இருக்குது அதேல்லாம் விட்டுட்டு இத போய் பிரச்சனையாக்லாம முகைதீன் இப்ராகிம்
    சேர்மன் எல்லாருக்கு வாய்ய்பு குடுக்கவேண்டியதுதானே .நானும் அங்க தான் நின்டேன் ஆளுங் கட்சிகாரனுவலுக்தான் மதிப்புகுடுத்த மாதிரி இருந்துச்சு .கவுசிலர்களையும் கொஞ்சம் கவனிச்சிகிறுங்க சேர்மன் மத்தப்படி சண்டை போட்டுக்குராதீங்க‌

    ReplyDelete
  4. எத்தனையோ வேல இருக்குது அதேல்லாம் விட்டுட்டு இத போய் பிரச்சனையாக்லாம முகைதீன் இப்ராகிம்
    சேர்மன் எல்லாருக்கு வாய்ய்பு குடுக்கவேண்டியதுதானே .நானும் அங்க தான் நின்டேன் ஆளுங் கட்சிகாரனுவலுக்தான் மதிப்புகுடுத்த மாதிரி இருந்துச்சு .கவுசிலர்களையும் கொஞ்சம் கவனிச்சிகிறுங்க சேர்மன் மத்தப்படி சண்டை போட்டுக்குராதீங்க‌

    ReplyDelete
  5. இளம்புயல் இத்ரீஸ்December 12, 2011 at 6:09 PM

    நகராட்சி தலைவி அவர்கள் தனது ஆதாரவாளர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று விரும்பி இருந்தால் அவர்களுக்கு மட்டும் அழைப்பு கொடுத்து உங்களை புறக்கனிதிருக்கலாம் அல்லவா?
    உங்கள் அனைவரையும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் உங்கள் அனைவரையும்அழைத்துள்ளார்.ஒரு மலேசியா அமைச்சர் மற்றும் முதல்வர் நமதூருக்கு வருகை தந்ததும் நகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்ததும் நம்மனைவருக்கும் பெருமை தானே? வந்த சிறப்பு விருந்தினருக்கு 21 உறுப்பினர்களும் பொன்னாடை போர்த்துவதென்பதெல்லாம் எப்படி சாத்தியமாகும்?
    இது போன்ற சின்ன குறைகளை எல்லாம் பெரிது படுத்தாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  6. என்னதான் இருந்தாலும் எலோரையும் அறிமுகப்படுதிருக்க வேண்டும்.....

    இனிமேலாவது இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துகொள்ளவும்... ஏனென்றால் இதுபோல் வருங்காலத்தில் பல சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உண்டு...


    இறுதியாக "மலேசியா முதலமைச்சரும்,மந்திரியும் வந்த போது நம் நகரை எப்படி நிர்வகித்து உள்ளீர்களோ.. அதே போல் ஆண்டு முழுவதும் மக்களுக்காக உழைக்க பாடுபடுங்கள். நல்ல உள்ளங்கள் என்றும் உங்களை வாழ்த்தும்.

    ReplyDelete
  7. உங்களது EGO க்களை மூட்டை கட்டி வைத்து விட்டு , இதே வேகத்தை தத்தமது வார்டு மக்களுக்கு என்ன நல்லது செய்யலாம் என்று யோசியுங்கள்.... சகோதரர் முஹைதீன் இப்ராஹீம் அவர்களிடம் அரசியல் வாசனை வீசுவதாக எண்ணுகின்றேன்.... நீங்கள் எடுத்துள்ள பொறுப்புக்கு இது உகந்ததல்ல....

    மற்றபடி சேர்மன் விஷயத்தில் எனக்கு எந்த தவறும் நடந்த படி எனக்கு தோன்றவில்லை

    by M.HASANUL ARIBIN (South Street)

    ReplyDelete
  8. /////கீழக்கரைக்கு மற்றொரு நாட்டின் மாநில முதல்வர் வருகை தருகிறார் என்ற அடிப்படையில் அவரை நமது நகராட்சி சார்பாக வரவேற்று கண்ணியபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வரவேற்பளித்தோம்.////

    இவ்வாறு சகோதரி சொல்லியது அவரது கடமையை வெளிப்படுத்துகிறது, வாழ்த்துக்கள்...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.