Thursday, December 8, 2011

கீழக்கரை அலவாய்கரைவாடியில் தீ விபத்து ! ஜவாஹிருல்லா.எம்.எல்.ஏவுக்கு கோரிக்கை




அலவாக்கரைவாடியில் இன்று நடந்த தீவிபத்தில் முற்றிலும் எரிந்த நிலையில் குடிசை


சில மாதங்களுக்கூ முன் கீழக்கரை ஸ்ரீநகர் பகுதியில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி செய்த சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா.


கீழக்கரை அருகே உள்ள அலவாய்க்கரைவாடியில் தங்கசாமிகமலா,முனியசாமி,சேதுராஜா(ஊனமுற்றவர்) ஆகியோருக்கு சொந்தமான மூன்று குடிசைகள் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சாம்பலானது.இதில் கமலா என்பவருக்கு சொந்தமான குடிசையில் இருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் மூன்று குடிசைகளில் உபயோகித்து வந்த வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சாம்பலானது .இது குறித்து வி.ஏ.ஓ பாலையா விசாரித்து வருகிறார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முத்துசாமி கூறுகையில், சில மாதங்களுக்கு முன் அருகில் உள்ள பகுதியில் நடந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நமது தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா உடனடியாக உதவி செய்து விரைவாக நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தார்.அதே போல் இத்தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் தலையிட்டு உதவிட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.