Monday, December 26, 2011

கீழக்கரையில் சாலை மறியல் !15க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கைது !



பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக்கொடி காட்ட புறப்பட்ட தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை -ஏர்வாடி முனை ரோட்டிலும் தேமுதிகவினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர் .தேமுதிகவின் கீழக்கரை நகர் செயலாளர் மதிவாணன் தலைமையில் திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மேகவர்ணம்,பொருளாளர் ராமகிருஸ்ணன்,முன்னாள் நகர செயலாளர் ஜாபிர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர்.

மறியலில் ஈடுபட்ட இவர்களை இவர்களை கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன்,தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.