Friday, December 16, 2011

கீழக்கரை சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையிடம் நகராட்சி தலைவர் மனு !




கீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரையில் உள்ள பெட்ரோல் பங்க் வரை அமைந்துள்ள வள்ளல் சீதக்காதி சாலையை சீரமைக்க ராமநாதபுரம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் சென்று அத்துறை அதிகாரி பவுன் ராஜிடம் கீழக்கரை நகராட்சி தலைவர் ராபியத்துல் காதரியா மனு கொடுத்தார்.

விரைவில் இது தொடர்பாக மேல் அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்பட்டு சாலை சீரமைக்கபடும் என்று பவுன் ராஜ உறுதியளித்தார்.இந்த‌ சாலை நெடுஞ்சாலை துறை பொறுப்பில் இருந்து வ‌ருகிறது.
கீழ‌க்க‌ரையில் முக்கிய‌ சாலையான வள்ளல் சீதக்காதி சாலை குண்டும் குழியுமாக‌ காண‌ப்ப‌டுகிற‌து.நீண்ட‌ கால‌மாக‌ இந்த‌ சாலையை சீர‌மைக்க‌ கோரிக்கை இருந்து வ‌ருவ‌து குறிப்பிட‌ த‌க்க‌து.

1 comment:

  1. well done Mrs Rabiyathul Khadariya latha...

    ungalin muyarchikku allah vetriyaith tharuvaanaga ...

    ReplyDelete

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.