Tuesday, December 6, 2011

போலீஸ் பொதுமக்கள் சார்பில் விளையாட்டு போட்டி !





திருப்புல்லாணி அருகே உள்ள பொக்கெனேந்தல் கிராமத்தில் போலீஸ் மற்றும் பொது மக்கள் நட்புறவை வலுபடுத்தும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவை கீழக்கரை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமை தாங்கி விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவ,மாணவியருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றது.


போட்டி சாலையில் நடத்தப்பட்டதால் போக்குவரத்து சிறிது நேரம் தடைபட்டது .சிறுவர்களை ஊக்கப்படுத்தும் இது போன்ற விளையாட்டு போட்டிகள் அவசியம்தான் அதே நேரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு தொந்தரவு இல்லாத வகையில் போட்டிகளை வேறு இடத்தில் நடத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கேட்டு கொண்டனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.