
(பைல் படம்) இந்த செய்தி சம்பந்தப்பட்ட படம் அல்ல
கீழக்கரையில் முறையான ஆவணங்கள்(ஆர்.சி.புத்தகம்,வாகன தணிக்கை) இல்லாமல் ஓட்டிய ஏழு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கீழக்கரையில் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அதிகாரி இளங்கோவன் கீழக்கரை ஏர்வாடி ரோட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் இந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு கீழக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து சஹாப்தீன் என்பவர் கூறுகையில் , வாரம் ஒருமுறை இது போன்ற ஆய்வுகள் மேற்கொண்டால் முறையான ஆவணங்கள் இல்லாமல் ஓட்டும் டிரைவர்களும்,ஆவணங்கள் இல்லாத மினி வேன்கள்,ஆட்டோக்கள் போன்ற வாகனங்கள் அதிகளவில் பிடிபடும் என்றார்.
No comments:
Post a Comment
செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.