Tuesday, May 28, 2013

ஏர்வாடி அருகே வேன் விப‌த்தில் 2பேர் ப‌லி! 19பேர் காய‌ம்!



ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து டிரைவர் உள்ளிட்ட இருவர் பலியாகினர்.கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு சுற்றுலா வேனில் நான்கு குழந்தைகள் உள்பட 22 பேர் ராமேஸ்வரம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டனர்.கொல்லத்தை சேர்ந்த மோகன பிள்ளை (வயது 51) வேனை ஓட்டி வந்தார்.
இன்று அதிகாலை ஒரு மணிக்கு ஏர்வாடி அடுத்த இதம்பாடல் செக் போஸ்ட் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது இதனால் வேன் நிலை குலைந்து பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.வேனுக்குள் தூங்கி கொண்டு இருந்த பயணிகள் அலறினர்.இருள் சூழ்ந்த நிலையில் பயணிகள் வேன் கண்ணாடியை உடைத்து காயங்களுடன் வெளியே வந்தனர்.

இதில் வேன் டிரைவர் மோகன பிள்ளை சம்பவ இடத்தில் இறந்தார். வேனில் பயணம் செய்த கோபிநாதர் (வயது 52) மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.ஒரு குழந்தை உட்பட 19 பேர் படுகாயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.ஏர்வாடி இன்ஸ்பெக்டர் துரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்


 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.