Monday, May 13, 2013

கீழ‌க்க‌ரையில் த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கி கிளை திற‌க்க‌ ஏற்பாடு!


 துபாயில் வ‌ணிக‌ மேலாண்மை குறித்த‌‌ க‌ருத்த‌ர‌ங்கு 09.05.2013 வியாழ‌க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.

இக்க‌ருத்த‌ர‌ங்கில் ப‌ரோடா வ‌ங்கி உள்ளிட்ட‌ ப‌ல்வேறு நிறுவ‌ன‌ங்க‌ளின் அலுவ‌ல‌ர்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌ர். த‌மிழ‌க‌த்திலிருந்து த‌மிழ்நாடு மெர்க‌ண்டைல் வ‌ங்கியின் துணைப் பொது மேலாள‌ர் எம். குண‌சேக‌ர‌ன் ம‌ற்றும் பிராந்திய‌ மேலாள‌ர் செந்தில் ஆன‌ந்த‌ன் ஆகியோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

அத‌னைத் தொட‌ர்ந்து ஈடிஏ அஸ்கான் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை எக்ஸிகியூடிவ் டைர‌க்ட‌ர் எம். அக்ப‌ர்கான் அவ‌ர்க‌ளையும் ச‌ந்தித்து கீழ‌க்க‌ரையில் விரைவில் த‌மிழ்நாடு வ‌ங்கிக் கிளை திற‌க்க‌ப்ப‌ட‌ இருப்ப‌து குறித்தும் அவ்விழாவில் ப‌ங்கேற்க‌ வேண்டும் என‌வும் வ‌லியுறுத்தின‌ர். நிக‌ழ்வின் போது வ‌ங்கியின் துபாய் பிர‌திநிதி விருதுந‌க‌ர் ச‌ந்திர‌சேக‌ரும் உட‌ன் இருந்தார்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.