Friday, May 24, 2013

கீழ‌க்க‌ரையில் பெண்ணை கேலி செய்த‌தாக‌ ஒருவ‌ர் கைது!


கீழக்கரையில் இளம்பெண்ணை கேலி செய்ததாக‌ புகாரின் பேரில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

கீழக்கரையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் கோகிலா(24). அப்பகுதியில் உள்ள கடை க்கு சென்று கொண்டிருந்த இவரை, கீழ‌க்க‌ரையை சேர்ந்த‌  முகமது ஹமீது(26) மற்றும்  ஜமீல் ஆகியோர் டூவீலரில் வந்து வழிமறித்து கேலி செய்த‌தாக‌  கோகிலா கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.
இத‌ன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹமீதை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜமீலை தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.