Sunday, May 26, 2013

கீழ‌க்க‌ரை அருகே த‌ர‌ம‌ற்ற‌ சாலை என‌ புகார்!ஜ‌வாஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ ப‌ணிக‌ளை நேரில் ஆய்வு!



கீழ‌க்க‌ரை அருகே உள்ள மாயாகுள‌ம் ஊராட்சியில் கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரை சாலையிலிருந்து மாயாகுள‌ம் ஊருக்குள் 1 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 2012‍ 2013 ஆண்டிற்கான‌ தாய்திட்ட‌த்தில் சுமார் 14 ல‌ட்ச‌ம் செல‌வில் அமைக்க‌ப்ப‌ட்டு வ‌ரும் சாலை த‌ர‌ம‌ற்று இருப்ப‌தாக‌ கிராம‌ ம‌க்க‌ள் ஜ‌வாஹிருல்லாஹ் எம்.எல்.ஏவிட‌ம் புகார் தெரிவித்த‌ன‌ர்.
இத‌னை தொட‌ர்ந்து ஜ‌வ‌ஹிருல்லாஹ்.எம்.எல்.ஏ இப்ப‌ணியை நேரில் ஆய்வு செய்து அதிகாரிக‌ளிட‌ம் ப‌ணிக‌ள் த‌ர‌ம‌ற்று இருப்ப‌தாக‌ கூறி த‌ரமாக‌ அமைத்து த‌ர‌ அறிவுறுத்தினார்.

மேலும் ஜ‌மாத்தார்க‌ள் உள்ளிட்ட‌ கிராம‌ ம‌க்க‌ள் எம்.எல்.ஏவிட‌ம் ,மாயாகுள‌ம் ஜமாத்தார்க‌ள் நிர்வாக‌த்தின் கீழ்  அர‌சின் உத‌விபெற்று செய‌ல்ப‌ட்டு வ‌ரும் 60 ஆணுக‌ள் ப‌ழ‌மையான் நேருஜி துவ‌க்க‌ ப‌ள்ளியின்  க‌ட்டிட‌ம் மிக‌வும் ப‌ழுத‌டைந்து நிலையில் உள்ள‌தாக‌வும் அதை ச‌ரி செய்ய‌வும்,மேலும் கூடுத‌ல‌ வ‌குப்பறைக‌ள் க‌ட்டுவ‌த‌ற்கு ப‌ள்ளிக்கென்று கூடுத‌ல் இட‌ம் வாங்கியுள்ள‌தாக‌வும் அதில் க‌ட்ட‌ட‌ம் க‌ட்டுவ‌த‌ற்கு அர‌சிட‌ம் நிதி பெற்று த‌ர‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுத்தன‌ர்.

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.