Wednesday, May 1, 2013

கீழ‌க்க‌ரை க‌ல்லூரியில் 20மாண‌வ‌ர்க‌ளுக்கு ப‌ணி நிய‌ம‌ன‌ ஆணை!


கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நேர்முக வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற கணிப்பொறியியல் துறையை சேர்ந்த 20 மாணவர்களுக்கு பணி நியமான ஆணை மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது
.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் முகம்மது ஜகாபர் தலைமை வகித்தார். தலைவர் ஹமீது அப்துல்காதர், தாளாளர் யூசுப்சாகிபு, இயக்குநர் ஹபீப் முகம்மது சதக்கத்துல்லா முன்னிலை வகித்தனர், வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ராஜா குபேந்திரன் வரவேற்றார், நேர்முக வளாகத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20 மாணவர்களுக்கு பணிநியமன ஆணையை முதல்வர் மற்றும் இயக்குநர் வழங்கினர், பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பேராசிரியர் சேக் யூசுப் மற்றும் பேராசிரியர்கள் செய்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.