Thursday, May 2, 2013

கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்க தேர்த‌ல்!தலைவர் தேர்வு !



கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்க தலைவராக லுக்மாயின் ஹக்கீம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கீழக்கரை மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு கடந்த ஏப்.19ல் தேர்தல் நடந்தது. இதையடுத்து 23ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் லுக்மாயின் ஹக்கீம், அப்துல்லா, அக்பர்அலி, முகம்மது அலி, முகம்மது அலியார், செய்யது அகமது கபீர், பாவா செய்யது கருணை ஆகிய ஏழு பேர் கொண்ட குழு வெற்றி பெற்றது.

இதையடுத்து தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லுக்மாயின் ஹக்கீம் தலைவராகவும், அக்பர்அலி துணைத்தலைவராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை நகராட்சி கவுன்சிலர்கள் ரபியுதீன், அன்வர் அலி ஆகியார் சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.