Friday, July 19, 2013

ஏர்வாடியில் ரூ1 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்!4 பேர் கைது!


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நேற்று கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் கியூ பிரிவு போலீசார் தர்கா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினர்.

அங்குள்ள அறையில் சோதனை மேற்கொண்டதில் மெத்தாகுலைன் என்ற போதை பொருள் பாக்கெட்களில் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ 1 கோடி போலீசார் தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து அறையில் தங்கியிருந்த 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பாக்கெட்களை மேற்கொண்டு ஆய்வு மேற் கொள்ள அனுப்பி வைத்தனர்.இந்த பாக்கெட்கள் இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் தொடர்ந்து மேலும் யாரெனும் இதில் சம்ப்பந்தப்பட்டுள்ளார்கள  என விசாரணை செய்து வருவதாக கியூ பிரிவு போலீசார் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.