Tuesday, July 23, 2013

தாசீம் பீவி கல்லூரி மாணவியர் பேரவை புதிய நிர்வாகிகள்!


photo:thassimin

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில், மாணவிகள் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா, முதல்வர் சுமையா தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர், உளவியல் ஆய்வாளர் அருண் தீபஞ்சன் பேசினார். பேரவை ஆலோசகர்கள் ஹாபிஷா, ஜன்னத்துல் பிர்தவுஸ் ஆகியோர், புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினர்.

முதல் "ஷிப்ட்' பிரிவு பேரவை தலைவராக ஹசிமா ருகையா, உதவி தலைவராக மரியம் நபீசா, பொதுச் செயலாளராக செய்யது பர்வீன், இணை செயலாளராக ஜீனத் முனவரா உள்பட 14 நிர்வாகிகளும், 2வது "ஷிப்ட்' பிரிவில் தலைவராக சுமையாரபி, பொதுச் செயலாளராக சுபஸ்ரீ, இணை செயலாளராக சித்திக்
காக ரகிலா உள்பட 10 பேர் பொறுப்பேற்றனர்.
 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.