Tuesday, July 30, 2013

கீழக்கரை கல்லூரியில் இப்தார் நிகழ்ச்சி!


கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மத நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இதற்கு கல்லூரி இயக்குநர் ஹபீப்முஹம்மதுசதக்கத்துல்லா முன்னிலை வகித்தார்.  கல்லூரி முதல்வர் அலாவுதீன் வரவேற்புரையாற்றினார்.

  நிகழ்ச்சியில் முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது ஜஹாபர், செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அபுல்ஹசன்சாதலி, முஹம்மது சதக் அறக்கட்டளை திட்ட மேலாளர் தாவீக்ஷ், பள்ளித் தலைமை ஆசிரியர்கள், கல்லூரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  நோன்பின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பியல்புகளையும் முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் கத்தீப் காமில் ஆலிம் கூறினார்.

ஜூம்மா பள்ளி துணைத் தலைவர் அய்யூப்கான் நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜூம்மா பள்ளி பொருளாளர் சேக்தாவூத், உறுப்பினர்கள்  ஜாகிர்உசேன், தமீமுல்அன்சாரி மற்றும் மாணவ தொண்டர்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.