Saturday, July 6, 2013

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கபடி போட்டிக்கு தடை!போலீசார் அறிவிப்பு!


கீழக்கரை:கீழக்கரையில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், மூன்று மாதங்களுக்கு கிராமங்களில் கபடி போட்டி நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.

கீழக்கரை சுற்றுவட்டார கிராமங்களில் ஆண்டுதோறும் ஜூலை முதல் மூன்று மாதங்கள் கபடி போட்டிகள் நடத்தப்படும். கடந்த ஆண்டுகளில் நடந்த போட்டிகளில் பல கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது.

டி.எஸ்.பி., சோமசேகர் கூறியதாவது:
பொது நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முன் போலீசில் அனுமதி பெற, கிராம தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கபடி போட்டிகள் மூலம் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், ஜூலை முதல் மூன்று மாதம் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, என்றார்

 

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.