Tuesday, July 2, 2013

கீழக்கரை மாட்டு கொட்டகையில் தீ விபத்து! ஆடு, மாடுகள் பலி!



கீழக்கரை சொக்கநாதர் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சந்திர மொளலி என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகை கோகுல் நகரில் உள்ளது.

இன்று பகல் சுமார் 1 மணியளவில் கொட்டகையில் திடீர் என தீ பிடித்து எரிந்தது.இதில் அங்கிருந்த 3 ஆடுகளும் 1 மாடும் தீயில் சிக்கி பலியானது
மேலும் 4க்கும் மேற்பட்ட மாடுகள் தீயில் சிக்கி காயமடைந்தது.அப்பகுதியை சேர்ந்தவர்கள் தீயை அணைத்தனர்.இதனால் தீ மேலும் பரவாமல் பெரும் ஆபத்து தடுக்கபட்டது.

 தகவலறிந்த  கால் நடை மருத்துவர்கள் காயமடைந்த மாடுகளுக்கு முதலுதவி செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆர் ஐ நாகஜோதி ,காஞ்சிரங்குடி விஏஓ தாஹிர் அலி ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.